நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவிற்கும், தொழிலதிபர் வணங்காமுடியின் மகனும், நடிகருமான விசாகனுக்கும் நாளை திருமணம் நடைபெற இருக்கிறது.
நாளை ரஜினி இல்லத்தில் வைத்து எளிமையாக திருமணம் நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பிரம்மாண்டமான வரவேற்பு நிகழ்ச்சி நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடைபெறுகிறது.
இந்த திருமண விழாவில் பங்கேற்பதற்காக தனது திரையுலக நண்பர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார் ரஜினி.
இதே போல தமிழக முதல்வர் பழனிச்சாமியை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நேரில் சந்தித்து மகளின் திருமணத்திற்கு அழைப்பிதழ் வைத்தார் ரஜினி.