பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி விழுப்புரம் மாவட்டம் தைலாபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியை, அக்கட்சியின் நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் ஏற்றி வைத்து, இனிப்பு வழங்கினார்.
பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன், இணைப் பொதுச்செயலாளர் இசக்கி படையாச்சி, துணைப் பொதுச்செயலாளர் சிவக்குமார், துணைத் தலைவர்கள் ந.ம. கருணாநிதி, மொ.ப.சங்கர், மாவட்ட செயலாளர் பெருமுக்கல் சம்பத், மாவட்டத் தலைவர் ரத்தினம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.