மதுரை ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர்.
மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்கு பின்னே அனுமதிக்கப் படுகின்றனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் உட்பகுதிகள் மற்றும் அனைத்து நுழைவு வாயில் பகுதிகளிலும் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். வெடி குண்டு மிரட்டலை அடுத்து, கூடுதலாக 360 போலீசார் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தெரிவித்தார்.