மதுரை : வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது. மதுரை கல்பாலம், மீனாட்சியம்மன் கோயில் திருமஞ்சணக் கிணறு அருகே இந்த சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
ராஜன் (வைகை நதி மக்கள் இயக்கம் தலைமை ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் சோலை அமர் நாத், கணேஷ்பாபு, அறிவுச் செல்வம், சுப்பிரமணியம் , பாலன் பாஜக
மற்றும் செளராஷ்ட சேவா சங்க நிர்வாகிகள் இந்த சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டனர்.