மதுரையில் திமுக., தலைவராக இருந்த மு.கருணாநிதி சிலையைத் திறக்க ஆட்சேபம் தெரிவித்து ஆட்சியரிடம் மனு அளிக்கப் பட்டது.
மறைந்த திமுக., தலைவர் கருணாநிதியின் சிலை, மதுரையில் அமைக்கப் பட்டு வருகிறது. திறப்புக்காகக் காத்திருக்கும் கருணாநிதியின் சிலையைத் திறப்பதற்கு ஆட்சேபம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் ராம ஸ்ரீனிவாசன் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கடிதம் அளித்தார்.
அந்தக் கடிதத்தில், வ உ சி ஐயாவின் புனிதத் தன்மையை காப்பாற்ற வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!
சிம்மக்கல் பகுதியில் வ உ சி பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் காலங்களில் புதிய சிலைகளை அங்கே நிறுவ அனுமதிக்கக் கூடாது. வ உ சி அவர்களின் புனிதம் காப்பாற்றப்பட வேண்டும் என்ற நோக்கில் இந்தக் கடிதம் அளிக்கப்பட்டதாக பாஜக.,வினர் தெரிவித்தனர்.