திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்ய மத்திய அரசு அனுமதி தந்ததா..? என்று தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
இடைத்தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உண்டு, ஆனால் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
திருவாரூர் இடைத் தேர்தல் வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நோட்டீஸ் அனுப்பியது. மேலும், ஜனவரி 30ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது!