நெல்லை – தாழையூத்து இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், நாளை முதல் சில ரயில்சேவைகளில் மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.
தெற்கு ரயில்வே, மதுரை கோட்டத்தில் இருந்து வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பவை….
திருநெல்வேலி – தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் ரயில் போக்குவரத்தில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
-
வண்டி எண் 22627/22628 திருச்சி – திருவனந்தபுரம் – திருச்சி விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை கோவில்பட்டி – திருவனந்தபுரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில் 09.03.2020/ திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.
-
வண்டி எண் 16191 தாம்பரம் – நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை திண்டுக்கல் – நாகர்கோவில் ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 08.03.2020/ஞாயிற்றுக்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.
-
வண்டி எண் 16192 நாகர்கோயில் – தாம்பரம் அந்தியோதயா விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை நாகர்கோவில் – திண்டுக்கல் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.
-
வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை கோவில்பட்டி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.
-
வண்டி எண் 56769/56770 பாலக்காடு – திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை மதுரை – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.
-
வண்டி எண் 56770 திருச்செந்தூர் – பாலக்காடு பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை மதுரை ரயில் நிலையத்திலிருந்து மாலை 06.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கமான நேரத்தில் புறப்படும்.
-
வண்டி எண் 11022 திருநெல்வேலி – தாதர் வாரம் மும்முறை சேவை விரைவு ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை திருநெல்வேலி ரயில் நிலையத்திலிருந்து மாலை 3 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக மாலை 4 மணிக்கு புறப்படும். இந்த ரயில் 09.03.2020/திங்கட்கிழமையன்று வழக்கம் போல் செயல்படும்.
-
வண்டி எண் 56767/56768 தூத்துக்குடி – திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் 03.03.2020 முதல் 10.03.2020 வரை தூத்துக்குடி – திருநெல்வேலி நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
-
வண்டி எண் 56768 திருச்செந்தூர் – தூத்துக்குடி பயணிகள் ரயில் 02.03.2020 அன்று திருநெல்வேலி – தூத்துக்குடி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.
-
வண்டி எண் 56767 தூத்துக்குடி – திருச்செந்தூர் பயணிகள் ரயில் 11.03.2020 அன்று தூத்துக்குடி – திருநெல்வேலி ரயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.