தாம்பரம் -நெல்லை அந்த்யோதயா ரயில் இனி நாகர்கோயில் வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்…
மத்திய நிதி மற்றும் கப்பல் துறை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயலிடம் தாம்பரம் திருநெல்வேலி தாம்பரம் தினசரி அந்தியோதயா விரைவு ரயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய கேட்டுக் கொண்டதன் பேரில் ரயில்வே அமைச்சகம் கோரிக்கையை ஏற்று உத்தரவு பிறப்பித்துள்ளது
அதன்படி தற்போது மாலை 5 15க்கு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை திருப்பாதிரிப்புலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9 45 க்கு தாம்பரம் சென்றடைந்து, மறுமார்க்கத்தில் தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் மயிலாடுதுறை கும்பகோணம் தஞ்சாவூர் திருச்சி திண்டுக்கல் மதுரை விருதுநகர் வழியாக மறுநாள் மதியம் ஒரு மணிக்கு திருநெல்வேலி வந்து கொண்டிருந்த இந்த ரயில் நாகர்கோவிலில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலி விருதுநகர் மதுரை திண்டுக்கல் திருச்சி தஞ்சாவூர் கும்பகோணம் மயிலாடுதுறை திருப்பாதிரிப்புலியூர் விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை ஒன்பது 45க்கு தாம்பரத்தை சென்றடையும்
மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 45க்கு நாகர்கோவில் வந்தடையும் இதற்கான துவக்க நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என்று மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்