தமிழகத்தில் விழுப்புரம் மற்றும் தூத்துக்குடி அருகே நடந்த இரு வேறு விபத்துகளில் 15 பேர் உயிரிழந்தனர். 19 பேர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே ஏமப்பேரில் தனியார் பஸ் – வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிகாலை 3 மணிக்கு நடந்த இவ்விபத்தில், சென்னையிலிருந்து காங்கேயம் நோக்கி சென்ற காரில் பயணித்த 7 பேரும், பஸ்சில் பயணித்த 2 பேரும் உயிரிழந்தனர்.
ஆம்னி பஸ் டிரைவர், ஜார்கண்ட் மாநில தொழிலாளர்கள் 8 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர். 11 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.