வைகோவும், திருமாவளவனும் கூட்டணியில் இருக்கிறார்களா? என்பதை சொல்லும் துணிச்சல் கூட மு.க.ஸ்டாலினுக்கு இல்லை என்று தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வைகோவும், திருமாவளவனும் திமுகவுடன் தோழமை என்று கூறிக் கொள்வதாகத் தெரிவித்தார். ஆனால் தற்போது வரை அவர்கள் கூட்டணியில் உள்ளனரா என்பதை சொல்லும் துணிச்சல் ஏன் வரவில்லை என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்