முதலமைச்சர், அமைச்சர்கள் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது 4 பிரிவுகளின் கீழ் பெரம்பலூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பெரம்பலூரில் செப்டம்பர் 12 ஆம் தேதி நடந்த திமுக ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக திமுக.,வைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா மீது வழக்கறிஞர் துரை பெரியசாமி என்பவர் புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் பெரம்பலூர் நகர போலீசார் ஆ.ராசா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.