Home Reporters Diary குழம்பித் தவிப்பது மட்டுமல்ல… குழப்பத்தையும் ஏற்படுத்தும் குரூர குருடர்கள்!

குழம்பித் தவிப்பது மட்டுமல்ல… குழப்பத்தையும் ஏற்படுத்தும் குரூர குருடர்கள்!

நேற்று வரை பாக்கிஸ்தானை தீவிரவாத நாடு என சொல்லக்கூடாது அங்கேயும் மனிதர்கள் தானே இருக்கிறார்கள் என்று சொன்ன பொய்யர்கள் இன்றைக்கு ஐயோ அங்கே இந்துக்கள் மட்டுமா கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் எல்லா மதத்தினரும் கொடுமைப்படுத்தப்படுகிறார்கள் என்கிறதுகள்.

சரி அப்படி செய்யப்படும் கொடுமையை தடுக்க இந்த மானங்கெட்ட பொய்யர்கள் போராலீஸ் என்ன செஞ்சதுகள்?
பாக்கிஸ்தானை கண்டித்ததா? வங்கதேசத்தை கண்டித்ததா? இல்லை.

பக்கத்திலே இருக்கும் நாடுகள் அங்கே இருக்கும் சிறுபான்மையினரான இந்துக்களை கொடுமை செய்யலாம்.
அதை பத்தி பேசமாட்டோம். அங்கே இந்துக்கள் என்ன ஆனார்கள் என பேசுவது கூடாது.
அது இங்கே இருக்கும் குறீப்பிட்ட மதத்தினரை புண்படுத்தும்.

ஆனால் ஆனால் ஆனால்

நமது நாடு அங்கிருந்து வரும் இந்துக்களுக்கு சீக்கியர்களுக்கு புகலிடம் தரக்கூடாது. அடைக்கலம் தரக்கூடாது.
எல்லோருக்கும் அடைக்கலம் தருகிறோம் என சிறுபான்மையினரை கொடுமைபடுத்தி கற்பழித்து கொல்லும் தீவிரவாதிகளுக்கும் சேர்த்து அடைக்கலம் தரவேண்டும்.

இது தானே இந்த சோ கால்டு போராட்டத்தின் அடிப்படை.

நேற்று பாக்சிஸ்தானே பாலாறும் தேனாறும் ஓடுகிறது என எழுதியதுகள் இன்றைக்கு ஐயோ அங்கே எல்லோரும் கொடுமைப்படுத்தப்படுகிறார்களே என கண்ணீர் விடுகிறதுகள்.

சரி அதுக்கு என்ன செஞ்சதுகள்?

ஜக்கி வாசுதேவ் பாக்சிஸ்தானிலே இந்துக்களுக்கு திருமண உரிமை இல்லை என சொன்னதிலே குத்தம் கண்டுபிடிக்குதுகளாம். பாக்சிஸ்தான் 2017 இல் இந்துக்களுக்கும் திருமண உரிமை என மசோதா கொண்டு வந்தது என.

அது சிந்து மாநிலத்திலே மட்டும் கொண்டு வரப்பட்டது. அது சட்ட வரைவு மட்டுமே இன்னமும் சட்டம் ஆகவில்லை.

கவனிங்க நண்பர்களே பாக்கிஸ்தானிலே நீங்கள் இந்துவாக இருந்தால் உங்கள் திருமணத்தை பதிவு செய்யமுடியாது. அரசு அதை திருமணம் என்றே கருதாது. அதையும் இங்கே சிறுபான்மையினருக்கு இருக்கும் உரிமைகளையும் ஒப்பிட்டு பாருங்கள்.

பாக்சிஸ்தானிலே இந்துக்கள் தேர்தலிலே போட்டியிட முடியாது. அங்கே சிறுபான்மையினருக்கு என 10 தொகுதிகள் இருக்கும் அதிலே போட்டியிட்டுக்கொள்ளவேண்டியது தான்.

இப்படி இந்துக்களுக்கான கொடுமைகளை இதுகள் பேசியதா? இல்லை.

ஆனால் இது எங்களின் மத உரிமை மத கோஷங்களை எழுப்புவோம் என சொல்கிறது என்றால் இது என்ன என நீங்கள் யோசிக்கவேண்டும்.

  • ராஜா சங்கர்

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version