கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியிலிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவரை படுகொலை செய்த பயங்கரவாதிகளை கண்டித்தும், இந்த வழக்கை NIA ஏற்று விசாரணை நடத்த வலியுறுத்தியும், குமரி மாவட்ட இந்துமுன்னணி சார்பாக படந்தாலுமூடு டிப்போ முன்பிருந்து மௌன ஊர்வலமும் களியக்காவிளையில் மாபெரும் ஆர்பாட்டமும் நடைபெற்றது.
இதில் இந்து முன்னணி மாவட்ட தலைவர் மிசா சோமன் தலைமை வகித்தார். இந்துமுன்னணி மாநில பொதுச் செயலாளர் அரசுராஜா பாஜக மாநில துணை தலைவர் M.R.காந்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
இதில் ஆர்.எஸ்.எஸ்., பரிவார் அமைப்பின் மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.