நாளை பிரதமர் மோடி – சீன அதிபர் ஜின்பிங் இருவரும் மாமல்லபுரத்தில் சந்திக்க உள்ளதால், அங்கு பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கவும் பல ஏற்பாடுகள் அமைக்கப்பட்டுள்ளன.
மொத்த மாமல்லபுரமும் ஜிலுஜிலுவென தயாராகியுள்ளது இந்திய பிரதமரையும், சீன அதிபரையும் வரவேற்று உபசரிக்க. ஊரையே மாற்றியமைத்துள்ளனர் அரசு அதிகாரிகளும், காவல்துறையினரும். மொத்த மாமல்லபுரமும் காவல்துறை கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகளுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அங்கு ஏதும் அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்க தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, வான் போக்குவரத்து போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. மேலும் பேருந்துகளும் மாமல்லபுரத்தில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது. மர்மநபர்கள் கடல் வழியாக ஊடுருவுவதை தடுக்க அங்கு கடலோர பாதுகாப்பு படையின் 2 கப்பல்கள், ஒரு நீர்மூழ்கி கப்பல் என 3 கப்பல்கள் மாமல்லபுரம் கடற்கரை கோவிலுக்கு கிழக்கே ஒரு கி.மீ. கடல் மைல் தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.