குடும்ப வன்முறை பாலியல் வன்முறை அதிகார வன்முறை போன்ற பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் அதிகமாக உள்ளன.
இவை அனைத்தையும் தடுக்கும் முயற்சியாக 1999 டிசம்பர் 17ஆம் தேதி ஐநா சபை ஒரு தீர்மானம் நிறைவேற்றியது.
ஒவ்வொர் ஆண்டும் நவம்பர் 25-ம் தேதியை பெண்ணுரிமை காப்பது, பெண்களுக்கு எதிரான வன்முறையை கண்டிப்பது, இவற்றை நோக்கமாகக் கொண்டு வன்முறை ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்தது.
பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முழக்கமிட்ட ‘மிரா பெல்’ சகோதரிகள் மூவரை கொடூரமாகக் கொலை செய்த 1960 நாம்பர் 25 ஐ நினைவுகூரும் வகையில் இந்த தினம் அறிவிக்கப்பட்டது.
மிராபெல் சகோதரிகள் டோமினிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். அந்த நாட்டின் சர்வாதிகாரி டுரூஜில்லோ வை எதிர்த்து இயக்கம் நடத்தியதால் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த வருடத்திற்கான தலைப்பு ‘நோ வயோலென்ஸ் அகைன்ஸ்ட் விமென் 2009 நவம்பர் 25’.
16 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சார நிகழ்ச்சிகளில் அரசு அமைப்புகள், ஐநா சபை, மக்கள் சங்கங்கள், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பிரமுகர்கள் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது நடக்கும் வன்முறையை எதிர்த்து நிகழ்ச்சிகள் நடத்துவார்கள்.
நாட்டு முன்னேற்றமும் தனிமனித முன்னேற்றம் கட்டுப் பாட்டோடு வளர்க்கப்படும் குழந்தைகளிடம் இருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும்!