உத்திர பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் வசித்து வருவதை தெரிந்ததும் தனது உறவினர்களுடன் சென்று கணவர் மற்றும் அந்த பெண்ணை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் வசித்து வருபவர் வர்மா – நிஷா யாதவ் தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகள் தான் ஆன நிலையில் தனது கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பது தெரியவந்துள்ளது.
அதனை அடுத்து நிஷா தனது உறவினர்களை அழைத்து கொண்டு அந்த பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்த தனது கணவர் மற்றும் அந்த பெண்ணையும் சராமரியாக தாக்கிய காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.