உண்மையிலேயே விமானம் ஓட்டிய அனுபவத்தைப் பெற்றேன் என்றார் தெலங்காணா அமைச்சர் கேடிஆர். அந்த வீடியோ வைரல் ஆக பரவி வருகிறது.
விமான நிலையத்தில் சிமுலேட்டர் ஏற்பாடு அமைப்பை தொடங்கி வைத்த முதல்வர் கேசிஆர். பைலட்டின் இடத்தில் விமான இன்ஜினை ஆப்பரேட் செய்த கேடிஆர்.
டைரக்டர் ஜெனரல் ஆஃப் சிவில் ஏவியேஷன் (டிஜிசிஏ) உதவியோடு விமானநிலையத்தில் மிக உயர்ந்த அளவைகளோடு கூடிய பிளைட் சிமுலேட்டர் டெக்னிக் சென்டரை (எஃப்எஸ்டிசி) தொடங்கினார்கள்.
அண்மையில் இந்த சிமுலேட்டர் அமைப்பை தெலங்காணா அமைச்சர் கேடிஆர் துவக்கினார். இந்த சிமுலேட்டர் மூலம் விமானத்தோடு வேலை இல்லாமலே விமானத்தை இயக்குவதற்குத் தேவையான பயிற்சி அளிப்பார்கள். பைலட்டுகளுக்கு முதலில் பயிற்சி ஆரம்பமாவது சிமுலேட்டர் மூலமாகத்தான். அதன் பிறகே உண்மையான விமானத்தில் பயிற்சி அளிப்பார்கள்.
விமானத்தின் இஞ்சினில் எப்படிப்பட்ட சூழ்நிலை இருக்குமோ சிமுலேட்டரிலும் அதேபோன்று எந்திரங்கள் இருக்கும். அமைச்சர் கேடிஆர் இந்த பிளைட் சிமுலேட்டரில் அமர்ந்து பட்டன்களை அமுக்கி உண்மையாகவே விமானம் இயக்கிய அனுபவத்தைப் பெற்றார். காக்பிட்டில் உள்ள பைலட் அமைச்சருக்கு உதவி செய்து அவர் கையால் விமான இன்ஜினை இயக்க வைத்தார்.