தென்மாவட்டத்தில் மதக்கலவரத்தை உருவாக்க முஸ்லிம்கள் முயற்சி செய்வதாக விஸ்வ ஹிந்து பரிஷத் குற்றம் சாட்டியிருக்கிறது. அந்த அமைப்பின் திருநெல்வேலி மாவட்ட செயலாளர் இ.ஆறுமுகக்கனி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது…
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சிக்கு மேற்காக செட்டி குளம், சிவசைலம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தை ஒட்டிய ஒரு எழில் கொஞ்சும் அழகிய கிராமம் தான் சம்பன்குளம் இவ்வூரில் நாடார்கள் 160 குடும்பங்களும் முஸ்லீம்கள் 500 குடும்பங்களும் வாழ்கின்றனர்.
இவ்வூரில் காட்டுபச்சாத்தி மாடன் கோவில் காலங்காலமாக நாடார்களுக்கு பாத்தியபட்ட கோவிலாகும். அந்த காட்டுகோவிலை தான் அந்த ஊர் நாடார் சமூகத்தவர் அனைவரும் வணங்குவர். வருடாவருடம் மண்பீடத்தை புதுபித்து சித்திரையில் கோவில் கொடை விழா நடப்பது வழக்கமாகும். (கொரொனா காரணமாக இவ்வருடம் கோவில் விழா நடைபெறவில்லை)
மழை காலங்களில் மண்பீடம் கரைந்து விடுவதால் அங்கு சிமெண்ட் ஷீட் அமைத்துள்ளார் அங்கு நாடார்களின் நாட்டாண்மைகாரராக விளங்கும் திரு.பச்சமால் நாடார் அவர்கள்..
நாங்கள் பிஜேபியையும் இந்துத்வத்தை எதிர்க்கிறோமே தவிர இந்து சகோதரர்களையோ இந்து மத வழிபாட்டையோ அல்ல என்று நீட்டி முழங்கி பேசி வந்த முஸ்லீம்கள் ஆட்டை கடிச்சி மாட்டை கடிச்சி மனிதனை கடித்த கதையாக அந்த ஊரில் பெரும்பான்மையாக உள்ளதால் முஸ்லிம்கள் ஒன்றுகூடி இங்கு நாடார்களின் குலதெய்வ கோவில் இருக்க கூடாது என்று பிரச்சனை செய்துள்ளனர்..
தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோவில் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாக பொய் புகார் அளித்துள்ளனர். ஆனால் அந்த கோவில் நிலத்திற்கு பட்டா உள்ளதனை ஆராயாது
முஸ்லீம்களின் அழுத்தத்தால் மாவட்ட ஆட்சியர் உண்மை நிலைகளை கண்டறியாமல் கோவிலை அகற்ற உத்திரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் ஜேசிபி மூலம் கோவிலை அகற்றி உள்ளனர். வரைபடம் அனுமதி இன்றி கோவில் கட்டபட்டிருப்பதாக அதிகாரிகள் சப்பை கட்டும் கட்டியுள்ளனர்.
நாடார்கள் அப்பகுதியில் ஏழ்மை நிலையில் விவசாயம் மட்டும் செய்து கொண்டு விழிப்புணர்வற்று உள்ளனர். அவ்வூரின் பெரும்பான்மையாக உள்ள முஸ்லீம்கள் செல்வந்தர்களாகவும் மத நெட்வொர்க் காரணமாகவும் அந்த ஊரை தனி நாடு போல் கருதி நாடார்களின் குலதெய்வ கோவிலை மாவட்ட ஆட்சியர் மூலம் அகற்றியுள்ளனர்.
இந்தியா மதசார்பற்ற ஜனநாயக நாடு என்று வாய் கிழிய பேசும் முஸ்லிம்கள் ஒரு கிராமத்தில் பெரும்பான்மையாக உள்ள ஒரே காரணத்தினால் இந்துக்களின் குல தெய்வ கோவிலை எதிர்த்து இருப்பது அவர்களின் சுய முகத்தினை பொது சமூகம் அறிய கூடிய நிகழ்வாக அமைந்துள்ளது.
பல ஆண்டுகளாக அந்த ஊரில் நாடார் மற்றும் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாக இருந்து உள்ளனர்.
ஆனால் தற்போது தீவிர இஸ்லாமிய மத செயல்பாட்டு சிந்தனையில் அங்கு முஸ்லிம்கள் மத பிரச்சனையை உருவாக்கி இருப்பது மத நல்லிணக்கத்திற்கு உகந்ததாக இல்லை. முஸ்லிம்கள் திட்டமிட்டு தென் மாவட்டங்களில் மீண்டும் ஒரு மத கலவரத்தை உருவாக்க அடித்தளம் அமைக்கிறார்களோ என்ற ஐயம் எழுகிறது.
அரசு நேரிடையாக தலையிட்டு ஆய்வு நடத்தி தீர்வினை பெற்று தருதல் அவசியமாகும். அந்த ஊர் முஸ்லிம்களின் பிண்ணனிகளை ஆராய்ந்து மத கலவரத்தை தடுக்க வேண்டும்… என்று கோரியுள்ளார்.