பெங்களூரு கலவரத்துக்கு முதலில் யார் காரணம்? அதன் பின்னணி என்ன என்பதை நாட்டுக்குச் சொல்ல வேண்டும்; கலவரத்தை திட்டமிட்டு செய்த அமைப்பு தடைசெய்யப் பட வேண்டும் என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை ஒன்றில் கோரியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
சிறுபான்மை சமூகத்தை சார்ந்த ஒருவர் (நேற்று
கோகுலாஷ்டமி கொண்டாடுவதையொட்டி) கிருஷ்ண பகவானை ரேபிஸ்ட் என்று பதிவிட்ட தாகவும் அதற்கு தலித் காங்கிரஸ் எம் எல் ஏ வின் உறவினர் பதிலுக்கு நபிகள் பற்றி போட வன்முறை செயலில் இறங்கி யுள்ளனர். இது கலவரமல்ல.முழுக்க முழுக்க ஒரு
அமைப்பின் வன்முறை. ஆகவே அந்த அமைப்பை
தடை செய்வதே தீர்வு!
3பேர் இறந்துவிட்டனர், 60 போலீசார் காயமடைந்தனர், 110 பேர் கைது செய்யப்பட்டனர், பெங்களூரு முழு நகரத்திலும் பிரிவு 144, தலித் எம்.எல்.ஏவின் வீடு எரிந்தது – அனைத்துமே ஒரு பேஸ்புக் இடுகையின் காரணமாக. இப்போது பார்க்க தாராளவாதிகள் இதை ‘கலகத்திற்கான உரிமை’ என்று நியாயப்படுத்துவது ஒரு சமூகத்தின் அடிப்படை உரிமை.
காங்கிரஸ் எம்எல்ஏ சீனிவாச மூர்த்தியின் உறவினர் நவீன் என்பவர் செய்த பேஸ்புக்கில் இஸ்லாம் முகமது நபி குறித்து பதிலுக்கு பேஸ்புக்கில் புகைப்படம் ஒன்றை பகிர்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்லீம்கள் எம்.எல்.ஏ சீனிவாச மூர்த்தியின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்..
போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்தது. (வன்முறை கூட்டம் தானே) .. போலீஸ் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி. 60க்கும் மேற்பட்டோர் காயம். எம்எல்ஏ வின் இரண்டு கார்களுக்கு தீவைப்பு.. தீயணைப்பு வாகனங்கள் மீது தாக்குதல்.. டிசிபியின் இரண்டு கார்கள், இருசக்கர வாகனங்கள் தீவைப்பு.. பெங்களூரு நகரத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு.. கலவரக்காரர்கள் 110 பேர் கைதாம்..
முகமது நபியை பற்றி ஒரே ஒரு படம் போட்டதுக்கு இத்தனை களேபரம்.. பார்த்தீங்களா நாம எத்தனை அமைதியாக, சகிப்பு தன்மையுடன் இருக்கின்றோம் என.. யூட்யூப், முகநூல் என நீங்க எந்த பக்கம் போனாலும் இந்து மத இந்து கடவுள்கள் அவதூறு மட்டுமே கொட்டி கிடக்கின்றது… நாம கடந்து போறோம்.அவனுங்க கடத்திட்டு போறானுங்க தீய வைச்சு கொழுத்துறானுங்க..
இப்பவும் வன்முறை கூட்டம் மேல குற்றம் சொல்லவே மாட்டாங்க.. நீ ஏன்பா கார்டடூன் போட்ட என பேசுவாங்க.. நல்ல வேளை இது பாஜக எம்எல்ஏ செய்யல…காங்கிரஸ்.. மறுபடி மறுபடி சொல்வது தான்..
நீங்க சைவம் வைணவம், அதில் உட்பிரிவு என நமக்குள்ளே சண்டை போட்டால் கண்ட நாயும் நம்மள ஏறி மிதிக்க தான் செய்யும்.. தமிழகத்தில் தொடர்ச்சியாக நடக்கும் இந்து மத அவதூறுகளை தடுக்க ஒரே வழி தான்.. அரசியல், அதிகாரம் நம்ம கையில் வேண்டும்…
இது இல்லாம என்ன முட்டுனாலும் சலசலப்பை மட்டுமே ஏற்படுத்த முடியும் தடுக்க முடியாது. அரசியல் அதிகாரம் என்பது நமது கைக்கு வர நமக்கு சரியானவர்களை தேர்ந்தெடுப்போம். யார் வரணும் என்பது எத்தனை முக்கியமோ அதை விட முக்கியம் யார் வரக்கூடாது என்பது மிக முக்கியம்.. பெங்களூரு சம்பவம் நமக்கு மீண்டும் ஒரு பாடம்.!