சீந்தில் மூலிகைக் கொடிகளால் ஒரு மலைவாழ் இளைஞனுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. கோடிக் கணக்கில் சம்பாதிக்கிறார்.
சீந்தில் கொடி பற்றி நகரத்தில் வசிப்பவர்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ஆனால் கிராம மக்களுக்கு தினமும் கண்ணில் படக்கூடிய தாவரம் சீந்தில் மூலிகைக் கொடி. நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதற்கு இந்த மூலிகை கொடி பயன்படுகிறது. சயின்ஸ்படியும் இந்த விஷயம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தற்போது கொரோனா பின்னணியில் பலரும் வேலை இழந்து உள்ளார்கள். இந்த நேரத்தில் சீந்தில் கொடி மூலம் கோடிக்கணக்கான ரூபாய்க்கு காண்ட்ராக்டர் வியாபாரத்தில் முன் செல்கிறார் ஒரு மலைவாசி இளைஞர்.
மகாராஷ்டிராவில் உள்ள தானேவைச் சேர்ந்த சுனில் பவார் என்ற இளைஞர் சீந்தில் கொடியை வியாபாரிகளுக்கு எடுத்துச் செல்வதற்கு புகழ்பெற்ற ஒரு நிறுவனத்திடம் ஒன்றரை கோடி ரூபாய்க்கு அக்ரிமெண்ட் செய்து கொண்டுள்ளார். அது மட்டுமல்ல. தன்னுடைய வியாபாரம் மூலம் நூற்றுக்கணக்கான மலைவாழ் மக்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளார்.
ஷாஹ்பூர் தாலுகாவிலுள்ள கரீத் என்ற இடத்தைச் சேர்ந்த சுனிலுக்கு உள்ளூர் காடுகளில் கிடைக்கும் மூலிகை மருத்துவ குணம் உள்ள செடிகளை பற்றி பெரியவர்கள் மூலம் நல்ல புரிதல் உள்ளது.
இம்யூனிடி பவரை அதிகரிப்பதில் சீந்தில் கொடி மிகவும் உபயோகப்படும் என்று அவர் அறிந்திருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன் அதனைச் சேகரித்து கம்பெனிகளுக்கு அளிக்கும் வியாபாரத்தை தொடங்கினார். அதில் ஒரு பாகமாக கட்கரி என்ற மலைவாழ் இனத்தவருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்து பிரதமரின் வன்தன் திட்டத்தின் உதவியோடு வன்தன் நிலையங்களை அமைத்தார். அப்போது ஆண்டுக்கு மூன்று முதல் 5 லட்சம் வரை சம்பாதித்தார்.
கொரோனா தொற்றுநோய் காரணமாக சீந்தில் மூலிகைக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. அதனால் டாபர், பைத்யநாத், ஹிமாலயா போன்ற நிறுவனங்களுக்கு 350 டன் சீந்தில்கொடி வழங்குவதற்கு அவர் 1.57 கோடி ரூபாய்க்கு காண்ட்ராக்ட் பெற்றுள்ளார். தற்போது சொந்த ஊரிலேயே சுனிலுக்கு ஐந்து வன்தன் நிலையங்கள் உள்ளன.
ஆயுர்வேதத்தில் சீந்தில் கொடியை மிக அதிகளவில் பயன்படுத்துவர். ஹைபர்டென்ஷன், ஆஸ்துமா, ஜுரம், டயாபட்டிஸ், இதயம் தொடர்பான நோய்களை குணப்படுத்துவதில் இது முக்கிய பணியாற்றுகிறது. முக்கியமாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் சீந்தில் கொடியின் உபயோகம் மிக அதிகம்.