― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?பதுக்கம்மா திருவிழா: பெண்களோடு இணைந்து ஆடிய ஆளுநர்!

பதுக்கம்மா திருவிழா: பெண்களோடு இணைந்து ஆடிய ஆளுநர்!

- Advertisement -
tamil isai sowntrarajan

தெலுங்கானாவில் ராஜபவனில் பதுக்கம்மா மலர் திருவிழாவின் 2-வது நாளான நேற்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார்.

தெலுங்கானாவில் பதுக்ம் மா என்ற திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா என்பது பெண்கள் அனைவரும் கொண்டாடக்கூடிய மலர் திருவிழா ஆகும். இத்திருவிழா நவராத்திரி சமயத்தில் தெலுங்கானாவில் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் கூடியதாகும்.

tamilisai

இந்த நாட்களில் தெலுங்கானா பெண்கள் வீட்டையும் தங்களையும் விதவிதமான மலர்களால் அலங்கரித்து கடவுளை வழிபடுவது உண்டு.

tamilisai sowntrarajan

இந்த நிகழ்வின் போது ஒரு தட்டின் நடுவில் கலசம் வைத்து அதை சுற்றி வண்ணமயமான பூக்களை அடுக்கி வைத்து அலங்கரிப்பர். பின்னர் இதை ஒரு பொது இடத்தில் வைத்து பெண்கள் பலரும் கூடி கும்மியடித்து பாடல் படி நடனமாடுவர்.

tamilisai sowntrarajan dance

இந்நிலையில், தெலுங்கானாவில் ராஜ்பவனில் பதுக்கம்மா மலர் திருவிழாவின் 2-வது நாளான நேற்று, தெலுங்கானா ஆளுநர் தமிழிசை பெண்களுடன் இணைந்து நடனம் ஆடி உள்ளார். இதனை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version