― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?100 கோடி! தேசத்தின் விசுவாசத்தின் ஜெயம்! மோடியின் சித்தம் ஜெயம்!

100 கோடி! தேசத்தின் விசுவாசத்தின் ஜெயம்! மோடியின் சித்தம் ஜெயம்!

- Advertisement -
100crore vaccine

மிகக் குறுகிய காலத்தில், அதாவது 9 மாதங்களுக்குள் 100 கோடி COVID தடுப்பூசி மருந்துகள் செலுத்தப்பட்ட சாதனையை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர். இது சமூக வலைதளங்களில் பெரிதாக எதிரொலித்தது. ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற தளங்களில் பலரும் அரசின் முன்னெடுப்புக்கும் சுகாதார பணியாளர்களுக்கும் மருத்துவர்களுக்கும், குறிப்பாக பல்வேறு குழப்பங்களைச் செய்து எதிர்க்கட்சிகள் மக்களை திசைதிருப்பி அச்சுறுத்திய போதும், அதையெல்லாம் கடந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள தாங்களாகவே முன்வந்து மக்களுக்கும், தங்கள் பாராட்டுதல்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்து வருகின்றனர். அவற்றில் சில கருத்துக்கள்…


“முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்”

நல்ல முறையில் தன் மக்களை காக்கும் மன்னவன் அந்த மக்களுக்கு தெய்வம் என கொண்டாடபடுவான் என்கின்றான் இந்து புலவன் வள்ளுவன்

கொடும் கொரோனா காலத்தில் தேசத்தின் பொருளாதாரத்தை காத்து, மருந்தும் கண்டறிந்து, எந்த நாட்டையு எதிர்பாராமல், பெரும் பணம் கொரொனாவுக்கு என வெளிநாட்டுக்கு சென்று நாடு தள்ளாடாமல், தேசமே மருந்து கண்டறிந்து 100 கோடி ஊசிகள் அதாவது கிட்டதட்ட 90% மக்கள் தடுப்பூசி பெற்றிருப்பதெல்லாம் சாதாரணம் அல்ல‌

எப்படி நடந்தது இந்த அதிசயம்? அதையும் வள்ளுவனே சொல்கின்றான்

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்”

அதாவது என் குடியையும் நாட்டையும் மேனமை அடையச் செய்வேன் என்று செயல் செய்யும் ஒருவனுக்கு தெய்வம் தன் ஆடையை இறுக உடுத்திக்கொண்டு உதவ முன்வந்து நிற்கும்.

ஆம், அப்படித்தான் மோடிக்கும் தெய்வம் உதவிற்று, இந்த மாபெரும் அசாத்தியமான சாதனை இங்கு நிகழ்ந்தது. அந்த தெய்வம் தேசத்தின் தலைமகனுக்கு எல்லா வளங்களையும் நலனையும் அருளட்டும்

  • ஸ்டான்லி ராஜன்

100 கோடி தடுப்பூசிகள்!

இந்தியா வென்றது!

வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக்கொள்ளும் நாடுகளைவிட என் மக்களை காத்து இந்தியா கம்பீரமாக நிற்கிறது.

எவ்வளவு நக்கல்கள்?? எவ்வளவு நையாண்டிகள்??இந்தியாவைப் பற்றியும் இந்திய தலைமையைப் பற்றியும்???

தட்டைத் தட்டினால் ஊசி வந்து விடுமா என்று கேட்டவர்களுக்கு தட்ட வேண்டியதை முறையாக தட்டி நேர்மையாக உழைத்தால் ஊசி வந்து விடும் என்று நிரூபித்த நூறுகோடி ஊசிகள்!

வெளிநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சில நண்பர்களும் உள்நாட்டிலேயே வாழ்ந்து கொண்டு இந்தியா தோற்க வேண்டும் என்று எதிர்பார்த்த நண்பர்களுக்கும் மரண அடியை கொடுத்துள்ளது இந்த 100 கோடி தடுப்பூசிகள்!

பிற நாடுகளை தோற்கடித்து அதிலுள்ள மக்களைக் கொன்று தான் வல்லரசுகள் என்று பறைசாற்றிக் கொள்ளும் நாடுகளை விட பிற நாடுகளில் உள்ள மக்களையும் தன் நாட்டில் உள்ள மக்களையும் காத்து நின்று காப்பதில் வல்லரசு என்று இந்தியா நிரூபித்துள்ளது.

என் இந்தியா ஒரு ஆன்மீக பூமி. என் இந்தியாவில் தான் அனைத்து மதத்தினரும் நிம்மதியாக வாழ முடிகிறது

என் இந்தியாவை ஒரு மிகப்பெரிய சக்தி வழிநடத்துகிறது. அந்த சக்தி இந்தியாவை எந்தெந்த நேரங்களில் யார் யார் தலைமை ஏற்க வேண்டும் என்பதை முடிவு செய்கிறது.

என் இந்தியாவிற்கும், இந்திய அரசுக்கும், இந்திய தலைமைக்கும் கோடான கோடி நன்றிகள்.

பேரிடர் சமயத்தில் அயராமல் உழைத்த மருத்துவ பணியாளர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் சிரம் தாழ்ந்த நன்றிகள் மற்றும் வணக்கங்கள்!

எந்த ஒரு தருணத்திலும் எங்களை திறம்பட வழிநடத்தும் மிகப்பெரிய சக்தியான எல்லாம் வல்ல இறைவனை இந்த நேரத்தில் பாதம் பணிந்து வணங்குகிறோம்.

வாழ்க இந்தியா!

வளர்க இந்தியா!



சில நேரங்களில் கற்பனையை தூக்கி சாப்பிடும் அளவிற்கு உண்மை இருக்கும். இன்று அத்தகைய ஒரு நாள்.

100 கோடி தடுப்பூசிகள் என்ற மாய எண்ணிக்கையை பாரத தேசம் கடந்துள்ளது என்பது கனவிற்கெட்டாத நிஜம். சுவாசத்தில் தேசத்தை வைத்த ஒரு தலைவன் இருப்பதால், ஆகச்சிறந்த விஞ்ஞானிகள் இருப்பதால், தன்னலம் கருதாத லட்சக்கணக்கான மருத்துவர்களும் மருத்துவப் பணியாளர்களும் சுகாதாரத்துறை ஊழியர்களும் இருப்பதால் சாத்தியமாகியுள்ள நிஜம். அனைவருக்கும் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். உயிரின் ஆழத்தில் இருந்து நன்றிகள்.

குடும்ப கட்சியின் கூட்டணி கொள்ளை ஆட்சியில் லட்சம் கோடி, ஆயிரம் கோடி என்று ஊழல்களை மட்டுமே பார்த்து மரத்துப் போன மக்களுக்கு எந்தவித அயல் தேச சார்பும் இல்லாமல் நூறு கோடி மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்பதை விட ஒரு நற்செய்தியோ வரமோ இருக்கவே முடியாது. இந்த தகவலே இங்கே உள்ள அந்நிய அடிவருடிகளுக்கு சொல்லக்கூடிய, சொல்ல இயலாத பாகங்களில் தாங்க இயலாத எரிச்சலை தரும்.

வாழ்க நீ எம்மான். உம்மை எங்களுக்கு அனுப்பி எமைக் காத்த ஈசனுக்கு வணக்கங்கள், நன்றிகள்.


எத்தனை சர்வதேச அரசியல் எதிர்ப்புகள்?

எத்தனை ட்ரக் மாஃபியாக்களின் முட்டுக்கட்டைகள்?

அட! உள்ளூர் வயித்தெரிச்சல் புடிச்ச அரசியலில் தான் எத்தனை எள்ளல்கள்?

யாரையாவது கண்டு கொண்டாரா? எதற்காகவாவது எதிர்வினையாற்றினாரா? என் கடன் பணி செய்வதே என்று கர்மசிரத்தையாக செய்து காட்டியிருக்கிறார்!

நாய்கள் தான் ஓயாமல் குரைத்துக் கொண்டே இருக்கும். சிங்கம் அரிதாக ஓரிரு முறை கர்ஜிக்கும்!

உள்ளூர் சில்லறைகளின் தாழ்வுமனப்பான்மை கதறல்கள், வயித்தெரிச்சல் வசவுகளுக்கெல்லாம் எதிர்வினையாற்றிக் கொண்டிருந்தால், இத்தனை பெரிய சாதனையைச் செய்திருக்க முடியுமா?

எதிர்ப்புச் சில்லறைகளின் முன் வாமனனாக வளர்ந்து வளர்ந்து சிலிர்ப்பூட்டுகிறார். உலகமே அதிசயமாகப் அள்ளி அரவனைத்துக் கொள்ளத் துடிக்கும் ஒரு மகாத்மாவாக வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பவருக்கு உள்ளூர் சில்லறைகளெல்லாம் ஒரு பொருட்டா?

தேசம் எனது தாய், எனது மகவு! அதற்காக உழைப்பதே என் நோக்கம்! என் கடமை! என் அவா! என்று வாழ்ந்து கொண்டிருக்கும்,

நவீன பாரதத்தின் சிற்பி, கலியுக குடாகேசனான நம் பிரதமர் நரேந்திர தாமோதரதாஸ் மோதி ஜி அவர்கள் நிறைந்த ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ இறைவனைப் ப்ரார்த்திப்போம்!

நூறுகோடிதடுப்பூசிகள் | பாரத் மாதா கி ஜய்!

  • ஆனந்தன் அமிர்தன்

vaccine

2020

மோதி:🇮🇳

இந்தியா கொரோனா தடுப்பூசியை உருவாக்கும்…

எதிர்(ரி) கட்சிகள்:

டுபாகூர் மோதி…. பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடுகளே தடுப்பூசி தயாரிக்க தடுமாறிகிட்டு இருக்காங்க.. இவன் ஏமாத்தறான்..
2022 க்கு முன்னால் இந்தியாவால் தடுப்பூசி தயாரிக்க முடியாது..

மோதி:

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி ஆரம்பித்து விட்டோம். விரைவில் நாடு முழுவதும் மக்களுக்கு தடுப்பூசி போடுதல் துவங்கப்படும்.

எதிர்(ரி) கட்சிகள்:

பித்தலாட்டம்.. இந்திய தயாரிப்பு தடுப்பூசிகளின் செயல்திறன், பக்கவிளைவுகளை மறைக்கிறது மோதி சர்க்கார்… ( பப்பு + வாட்ரா காங்கிரஸ் + கோபாலபுரம் ஸ்டாலின்)
இந்திய தடுப்பூசி போட்டுக் கொண்டால் மக்கள் ஆண்மை இழந்து விடுவார்கள்.. இது சிறுபான்மையினர் ( முஸ்லிம்) இனப்பெருக்கத்தை அழிக்கும் சூழ்ச்சி ( அகிலேஷ் யாதவ்)

2021

மோதி :

ஜனவரி 16 ஆம் தேதிமுதல் தடுப்பூசி ஆரம்பம்.. முதலில் முன்கள போராளிகள், அடுத்து 60 வயது கடந்தவர்கள்..

எதிர்(ரி) கட்சிகள்:

அப்பாவி மக்களை பலிகடா ஆக்காதே.. மோதி முதல் தடுப்பூசி நீ போட்டுக்கொள்…
மக்களே ஏமாறாதீர்கள்..மோதி ஒழிக

இவர்கள்மேல் காறி துப்பிவிட்டு மக்கள் லட்சக்கணக்கில் தடுப்பூசி மையங்களில் படையெடுப்பு..

எதிர்(ரி) கட்சிகளின் அடுத்த ஒப்பாரி..

பாஜக ஆட்சியில் இல்லாத எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு தடுப்பூசி தராமல் மோதி பழிவாங்குகிறார் (கோபாலபுரத்தான்)..
நாதாறி உ பீஸ் தமிழ்நாட்டில்
தடுப்பூசிஎண்ணிக்கை 5 கோடி தாண்டிவிட்ட உண்மையை கோபாலபுரம் கக்கூசில் மறைப்பார்கள்.

மோதி அரசு:

இந்திய தடுப்பூசி உற்பத்தி மாதம் 25 கோடிகள்.. தட்டப்பாடில்லாமல் நாடுமுழுவதும் இலவசமாக வழங்கப்படும்..

எதிர்(ரி) கட்சிகள்:

ஜெலுசில் மெளனம்.. தடுப்பூசியை குறை சொன்ன பப்பு முதல் திருட்டு திருமா, வெட்டி சிங்கம் வைகோ வரை நவத்துவாரங்களை பொத்திக் கொண்டு தடுப்பூசி மையத்தில் அசடு வழிய கையை நீட்டினர். கோபாலபுரம் மைனர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முண்டா பனியனுடன்
பாடி பில்டர் போஸ் கொடுத்தது உச்சக்கட்ட மரணபங்கம்..
21.10.2021

இந்திய தடுப்பூசி எண்ணிக்கை 100 கோடியை 9 மாதங்களில் கடந்த உலக சாதனை.. உலகம் வியந்து பாராட்டுகிறது…

எதிர்(ரி) கட்சிகள் 7 வருடங்களில் பழகிப்போன ஜெலுசில் மெளனத்தில்…

தமிழக கோபாலபுரம் ஊடகங்களில் வைகோ மகனுக்கு கட்சி தலைமை பொறுப்பு, கோவில் நகைகளை
உருக்குவது பற்றி விவாதங்கள்…
ஊராட்சி தேர்தல்கள் முடிந்த நிலையில் அடுத்த 200+க்வார்டர்+பிரியாணி எப்போது என்ற எதிர்பார்ப்பில் உபீஸ் ..

மோதி ஒழிக.. கோபாலபுரம் மைனர் வாழ்க..

  • எஸ். சுந்தர்

“மோடி என்ன – எவர் பிரதமராக இருந்தாலும் தடுப்பூசி போட்டுக்க வழி பண்ணியிருப்பாங்க தோழர்!”

“மக்களுக்குத் தடுப்பூசி தருவது ஆட்சியாளர்களின் கடமை தோழர்!”

அப்போது ஏன் எதிர்க்கட்சிகள் தடுப்பூசி பற்றி ஆயிரம் சந்தேகங்களைக் கிளப்பினார்கள்?

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர் ஒருவர் – “தமிழன் என்ன சோதனை எலியா?”- என்று ஆவேசப்பட்டாரே மறந்துவிடுமா?

இதே தமிழக ஊடகங்கள் – சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பும், சென்ற ஆண்டு தடுப்பூசி அறிமுகமான போதும் – எத்தனை சந்தேகங்களை விவாதம் என்ற பெயரில் தடுப்பூசிக்கு எதிராகக் கிளப்பினார்கள்?

ஒரு நகைச்சுவை நடிகர் தடுப்பூசி போட்டு இரண்டு நாளில் இறந்ததும் – எத்தனை பீதியைக் கிளப்பினார்கள்?

இப்போது ஆட்சிக்கு வந்த பிறகு – பல்லைக் கடித்துக் கொண்டு – அதிகாரபூர்வமான அறிவிப்புகளில் தடுப்பூசியை வரவேற்கிறார்களே தவிர – தேர்தலுக்கு முன்பு மோடி எதிர்ப்பு ஜோதியில் தடுப்பூசிக்கு எதிராகக் கிளப்பிவிட்ட சந்தேகங்கள் எத்தனை?

“இது மோடி வேக்ஸின் – பாஜக வேக்ஸின் – நான் போட்டுக் கொள்ள மாட்டேன்”- என்று அகிலேஷ் யாதவ் பேசவில்லையா?

“மக்களுடைய அச்சங்களைப் போக்க வேண்டும்”- என்ற போர்வையில் டிவி விவாதங்களில் எத்தனை சந்தேகங்கள் மோடி எதிர்ப்பு ஊடகங்களில் விவாதங்கள் – மக்களின் கருத்துக்கள் என்ற பெயரில் தடுப்பூசி பற்றி சந்தேகங்கள் கிளப்பப் பட்டன?

இன்று வெட்கமே இல்லாமல், தாங்கள் தடுப்பூசிக்கு எதிராகக் கிளப்பிவிட்ட சந்தேகங்களுக்கு எல்லாம் – மக்களை பீதியில் ஆழ்த்தியதற்கு வெட்கப்பட வேண்டும் என்ற உணர்வே இல்லாமல்….

ஒரு பிரமாண்ட மக்கள் தொகை கொண்ட நாட்டில் 100 கோடி தடுப்பூசி – அதிலும் பெரும் பகுதி இலவசம் – என்ற அளப்பரிய சாதனையை மனமாரப் பாராட்ட வக்கோ, நேர்மையோ இல்லாமல் அமைதி காக்கிறார்கள் மோடி எதிர்ப்பு வெறியர்களும் – மோடி வெறுப்பு ஊடகங்களும்!

எனவே உரக்கச் சொல்வோம்!

இது முழுக்க முழுக்க….

மோடிஜி தலைமையிலான பாரத அரசின் மாபெரும் சாதனை!

நூறுகோடிதடுப்பூசி

  • முரளி சீதாராமன்

vaccine against covid

ஒருவேளை இப்போது ( சீன கம்யூனிச கொரோனா தொற்றின்போது ) மத்தியில் காங் – திமுக கூட்டணி ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்…?

தற்போது கொரோனா தொற்றின் 27 வது அலை பேயாட்டம் போட்டுக்கொண்டிருக்கும்….நாட்டின் ஜனத்தொகையில் மூன்றில் ஒருபங்கு காலியாகியிருக்கும்…

தொற்றின் காரணமாக விவசாயம் – தொழில் உற்பத்தி போன்றவை முழுமையாக முடங்கி நாட்டில் பஞ்சம் தலைவிரித்து ஆடி , உணவுத்தேவைக்காக நம்நாடு பூட்டான் , நேபாளம் , இலங்கை , ஆப்கனிஸ்தான் போன்ற நாடுகளிடம் கையேந்தியிருக்கும்…

உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி முடக்கப்பட்டு ஃபைசர் மற்றும் சினோவாக் போன்ற தடுப்பூசிகள் இறக்குமதி செய்யப்பட்டிருக்கும்…அதிலும் பல லட்சம் கோடி ஊழல் நடந்திருக்கும்…திமுக – காங் தலைவர்கள் தடுப்பூசி இறக்குமதியில் பல லட்சம் கோடி ஊழல் செய்ததை சி.ஏ.ஜி அம்பலப்படுத்தியிருக்கும்…

வசதியுள்ளவர்கள் ஃபைசர் தடுப்பூசி பல ஆயிரம் ரூபாய் கொடுத்து போட்டுக்கொள்ள , வசதியற்றவர்களுக்கு சினோவாக் போடப்பட்டிருக்கும்..இரண்டு தடுப்பூசியுமே பலனளிக்காமல் மக்கள் கொத்துக்கொத்தாக செத்திருப்பார்கள்…

சோனியா – ராகுல் – பிரியங்கா வத்ரா குடும்பத்தினர் பத்திரமாக இத்தாலிக்கு இடம் பெயர்ந்திருப்பர்…

இந்தக் கொடுமையெல்லாம் நடக்காமல் , வராது வந்த மாமணியாக திரு.நரேந்திர மோடி அவர்களை நமக்களித்து , நம் உயிரையும் , இந்த தேசத்தையும் காத்து ரட்சித்த எங்கும் நிறைபரம்பொருளுக்கும் , அவரைத் தொடர்ந்து வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் வட இந்திய மக்களுக்கும் நம் நமஸ்காரங்கள்….

வாழ்க நீ எம்மான்!

( இதில் எதுவும் மிகையில்லை….மன்மோகன் ஆட்சிக்காலத்தில் பரவிய ( மருத்துவம் உள்ள ) பன்றிக்காய்ச்சலுக்கு 6 சதவீத மக்கள் பலியானதும் , கிரிக்கெட் விளையாடக்கூட எந்த நாடும் நம் நாட்டுக்கு வர மறுத்ததும் சமீபத்திய வரலாறு…)

  • சரவண குமார்

நூறுகோடி மோதி ஊசி

சீனாவின் பயோ யுத்தம் இந்த கொரோனா தொற்று என்பதை பலரும் இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். சீனாவை தண்டிக்க முடியாத அளவுக்கு அத்தனை பேர் குடுமியையும் சீனா தன் வசம் வைத்திருக்கிறது. அமெரிக்க ஜனாதிபதி பைடனோ பிற ஐரோப்பிய தலைகளோ சீனாவை கண்டு நடுங்குகிறார்கள். எனவே…. சீனா செய்த இந்த படுகொலைக்கு தண்டனை பெற சில ஆண்டுகள் ஆகலாம். தண்டனை நிச்சயம் உண்டு.

கொரோனா தொற்றை வைத்து பல நாடுகளையும் தடுப்பு மருந்து கொடுத்து அடிமை ஆக்கியிருக்கிறது அமெரிக்காவின் ஃபைசர். ஃபைசரின் போர்டில் இருப்பவர்களெல்லாம் அமெரிக்க அரசியல்வாதிகள் (ரிபப்ளிகன் & டெமாக்ரட் என இரு கட்சியினரும்), ஊடகங்கள் என… இது சீன அடிமை சிஐஏயின் ஸ்கெட்ச்!

இவர்களது திட்டத்தை ஆரம்பத்திலேயே பிரதமர் மோதி ஜி உணர்ந்தாரோ தெரியாது! இந்திய ஃபார்மா நிறுவனங்களை ஆரம்பம் முதலே உற்சாகப்படுத்தி, ஊக்குவித்து, உதவியளித்து அவர்களை தடுப்பு மருந்து தயாரிக்க வைத்தார்.

பரிசோதனைகளுக்கு பின் கோவிஷீல்டு , கோவாக்ஸினுக்கு அனுமதி வழங்கியது அரசு. வெளிநாடுகளுக்கும் கொடுத்து உதவியது. இந்திய தடுப்பு மருந்துகள் உலக சந்தையை ஆக்கிரமித்தால், ஃபைசர் எப்படி விற்க முடியும்? எனவே, எதிர்க்கட்சிகளை கொண்டு அதை அரசியல் ஆக்கி, அத்திட்டத்தை நிறுத்த வைத்தது ஃபைசர்.

இந்தியாவுக்குள் நுழைய எவ்வளவோ முயன்றது ஃபைசர். “அமெரிக்க பரிசோதனை எல்லாம் இங்கே பயனில்லை. எனவே, மற்ற தடுப்பு மருந்துகளை போல பரிசோதனை செய்த பிறகே அனுமதி. அதோடு இழப்பீடு, விலை ஆகியவையும் மற்ற தடுப்பு மருந்துகளுக்கு ஒப்பானதாக இருக்க வேண்டும்” என மோதி அரசு கறாராக சொல்ல, ஃபைசர் இந்தியாவில் நுழைய முடியவில்லை.

என்றாலும் அமெரிக்க ஜான்சன் & ஜான்சன் இந்திய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு பரிசோதனை செய்து வருகிறது. ரஷ்ய ஸ்புட்னிக்கும் அவ்வாறே.

இஸ்ரேலில் 100% ஃபைசர்! என்றாலும் பலரும் உயிரிழந்து வருகிறார்கள். வளைகுடா போரை துவக்கி வைத்த அமெரிக்க காலின் பவல் ஃபைசர் தடுப்பூசி எடுத்தும் (எடுத்ததால்?) கொரோனாவுக்கு பலியானார் இரு தினங்களுக்கு முன்.

ஃபைசர் 2 டோஸ் போட்டும் மக்கள் உயிரிழப்பதால் – ஃபைசரை சரி செய்வதை விட்டு – மூன்றாவது டோஸ், நான்காவது டோஸ் என ஃபைசர் பரிந்துரைக்க, அதையும் அமெரிக்க Centre for Disease Control, Food & Drug Administration எல்லாம் ஒப்புக் கொள்கின்றன! எத்தனை டோஸ் போடுகிறார்களோ அவ்வளவு வருமானம் ஃபைசருக்கு. அனேகமாக, அமெரிக்காவை ஒழித்த பிறகே பணத்தாசை பிடித்த ஃபைசர் அடங்கும் போல!

இப்பேற்பட்ட ஃபைசர், மாடர்னா, சீன சைனோவாக்ஸ் எல்லாவற்றுக்கும் 10 நாட்களுக்குள் அனுமதி கொடுத்த சீன அடிமை உலக சுகாதார அமைப்பு WHO , கோவாக்ஸினுக்கு இழுத்தடிக்கிறது! டாக்டர் சௌம்யா ஸ்வாமிநாதன், டெட்ராஸ் பின்புலம் பற்றி தேடிப்படிக்கவும்! 420கள்!

கொரோனா பிரச்சினையை வைத்து இந்தியாவில் மோதி அரசை கவிழ்த்து ஆட்சி மாற்றம் கொண்டு வர எத்தனையோ டூல்கிட்டுகளை களமிறக்கினர் – டெமாக்ரட்டுகள் (ஒபாமா, ஹிலரி, பைடன், கோமாளி ஹாரிஸ்), சோரோஸ், பில் கேட்ஸ் என பலர்! அத்தனையையும் தகர்த்தெறிந்தார் மோதி ஜி!

இந்தியா இன்று சுதந்திர நாடாக இருக்கக் காரணம் – இந்தியாவில் தயாரான கோவிஷீல்டும் கோவாக்ஸினும். நரேந்திர தாமோதரதாஸ் மோதி என ஒருவர் இல்லாதிருந்தால், இந்தியாவில் தடுப்பு மருந்து வெறும் கனவாகத்தான் இருந்திருக்கும்!

இத்தனைக்கும் “விஞ்ஞானிகளும், மருத்துவ பணியிலிருப்பவர்களுமே காரணம்” என்று அவர்களுக்கு credit கொடுத்து ஒதுங்குகிறார் மோதி ஜி…

நன்றி மோதி ஜி!

பாரத் மாதா கி ஜெய்!

  • செல்வ நாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version