ஸ்மார்ட்போன் பயனர்கள் பல்வேறு செயலிகளை பயன்படுத்துகின்றனர். அப்படி மொபைல் செயலிகளை பதிவிறக்கும் போது, அது உங்கள் போனில் சில அனுமதிகளை கேட்கும்.
நம்மில் பலரும், அதை என்னவென்று படிக்காமலேயே அவை எல்லாவற்றிற்கும் அனுமதி வழங்கிவிடுமோம். இதனால் நமது தனியுரிமை தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.
அந்த வகையில் தற்போது ஒரு புதிய ஆய்வு, இருப்பிட (location tracking on) கண்காணிப்புடன் பயன்பாடுகள் எந்த வகையான தனிப்பட்ட தகவல்களைப் பிரித்தெடுக்கின்றன என்பதை அடையாளம் காண ஆராய்ச்சியாளர்களுக்கு உதவியது.
இருப்பிட-கண்காணிப்பு தரவிலிருந்து பெறக்கூடிய தனிப்பட்ட தகவல்களின் வரம்பைப் பற்றிய முதல் விரிவான ஆய்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தாலியின் போலோக்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் லண்டன் பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த பெஞ்சமின் பரோன் ஆகியோரின் ஆய்வில், இதுபோன்ற தகவல்களைச் சேகரிப்பது பயனர்களின் தனியுரிமையை மீறுவதை எவ்வாறு பிரதிபலிக்கும் என்பதைக் காட்டுகிறது.
இந்த நோக்கத்திற்காக, ஆராய்ச்சியாளர்கள் டிராக்கிங் அட்வைசர் (TrackingAdvisor) என்ற மொபைல் செயலியை உருவாக்கினர். இது பயனர் இருப்பிடத்தை தொடர்ந்து சேகரிக்கிறது.
இருப்பிடத் தரவிலிருந்து, இந்த செயலியானது தனிப்பட்ட தகவல்களைப் பிரித்தெடுக்கலாம் அல்லது பயனர்கள் அத்தகைய தகவல்களின் சரியான தன்மை குறித்து கருத்துத் தெரிவிக்கும்படி கேட்கலாம், மேலும் தனியுரிமை உணர்திறன் அடிப்படையில் அதன் பொருத்தத்தை மதிப்பிடவும் முடியும்.
டிராக்கிங் அட்வைசர் பயன்பாட்டின் மூலம் – பயனர்கள் எந்த வகையான தனிப்பட்ட தகவல்களைப் பிரித்தெடுத்தது மற்றும் அதன் தனியுரிமை உணர்திறன் ஆகியவற்றை ஆராய்ச்சியாளர்கள் அடையாளம் காண முடிந்தது.
ஆய்வுக்காக, 69 பயனர்கள் குறைந்தது இரண்டு வாரங்களுக்கு ட்ராக் அட்வைசரைப் பயன்படுத்தினர். ட்ராக் அட்வைசர் 200,000 க்கும் மேற்பட்ட இடங்களைக் கண்காணித்து, சுமார் 2,500 இடங்களைக் கண்டறிந்து, புள்ளிவிவரங்கள் மற்றும் நபர்கள் குறித்த விவரங்கள் ஆகிய இரண்டையும் பற்றிய 5,000 தனிப்பட்ட தகவல்களை சேகரித்தது.
சேகரிக்கப்பட்ட தரவுகளில், பயனர்கள் உடல்நலம், சமூக-பொருளாதார நிலைமை, இனம் மற்றும் மதம் பற்றிய தகவல்களை கொண்டுள்ளனர் என்பதும் இந்த ஆய்வில் தெரியவந்தது.