இந்திய தலைநகர் டெல்லியில் தமிழ் கல்வி கூட்டமைப்பு என்றொரு அமைப்பு உள்ளது, அங்கு திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது, திறந்து வைத்தவர் தமிழக ஆளுநர் ரவி அவர்கள்
இச்சிலைதிறப்பில் திருவள்ளுவரை ஏக குத்தகைக்கு எடுத்திருக்கும் தமிழ் அமைப்பு தலைவர்களும், திராவிட தலைவர்களும் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதெல்லாம் கேட்கவே கூடாது
முன்பு கன்னடத்திலும் வடக்கே கங்கை கரையிலும் வள்ளுவன் சிலைக்கு சர்ச்சை வந்தபொழுது பொங்கிய திராவிட சிங்கங்கள் டெல்லியில் வள்ளுவன் சிலை திறக்கப்பட்டபொழுது அமைதி என்றால் அதுதான் திராவிட தமிழ் அரசியல்
அந்த விழாவில் கவர்னர் பேசியதுதான் இப்பொழுதுவிஷயம் , இதுகாலமும் திருக்குறள் ஜி.யு போப்பால் ஆங்கிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது எனும் வெற்று கோஷத்தை மிக நுணுக்கமாக உடைக்கின்றார் ஆளுநர்
உண்மையில் ஜியு போப் எனும் ஜார்ஜ் உக்ளே போப் தமிழகத்துக்கு 18ம் நூற்றாண்டில் மதம்மாற்றத்தான் வந்தான், வந்தவன் தமிழ்படித்தான் இன்னும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளும் படித்தான். அது தமிழ்பால் வந்த பற்று அல்ல மதம்மாற்ற அது அவசியம்
தென்மாவட்டங்களில் (முதலில் நெல்லை தூத்துக்குடி பக்கமும் பின் தஞ்சாவூர் பக்கமும்) தொடக்கத்தில் மதம் மாற்றினான் , ஆனால் சாதியினை அவனால் மாற்றமுடியவில்லை காரணம் அவனும் போப் அய்யராக மாறி இருந்தான்
இந்துமதத்தின் சாதி சிக்கலை களைவதாக சொல்லி கிறிஸ்துவத்துக்கு அவர்களை மாற்றினாலும் அங்கும் அதே சிக்கல் எழ அவன் தலைதெறிக்க பெங்களூருக்கு ஓடினான்
அவன் மதம்மாற்ற பொருத்தமில்லாதவன் என உணர்ந்த மேலிடம் இந்துக்களின் பல நூல்களை ஆய்வு செய்து (?) மொழிமாற்றும் பொறுப்பை கொடுத்தது
அவன் அப்படித்தான் திருக்குறளை ஒரு அரசியல் நூலாகக் கருதி மொழிபெயர்த்தான் அதில் இருக்கும் இந்து அடிப்படை கருத்துக்களை, இந்து தர்ம கருத்துக்களை முழுவதுமாக மறைத்து அது ஒருநீதி நூல் என மட்டும் மொழிபெயர்த்தான்
இதைத்தான் டெல்லியில் சுட்டிக்காட்டி ஒரு ஆன்மீக நூலை திரித்தான் மிஷனரி ஜியு போப் என உரையாற்றியிருக்கின்றார் ஆளுநர்
இது உண்மையும் கூட
இப்படிப்பட்ட போப் திருவாசகத்தை மொழிபெயர்த்தால் எப்படி இருந்திருக்கும்?
ஜியு போப் தமிழ்படித்த வெள்ளையன், அவன் தமிழ் நூல்களை படித்து உருகி ஆங்கில மொழிபெயர்ப்பு செய்தான் என்பதெல்லாம் திட்டமிட்ட விளம்பரம், அவன் மதம்பரப்ப வந்த மிஷனரி. வந்தவன் மதம் பரப்ப தமிழ்படித்தான், இங்குள்ள இந்து நூல்களை அதன் இந்துசாரம் நீக்கி மொழிபெயர்த்தான்
அதை டெல்லியில் சொல்லி அதிர வைத்திருக்கின்றார் ஆளுநர்
ஜியு போப் தன் கல்லறையில் “இங்கே ஒரு தமிழ் மாணவன் உறங்குகின்றான்” என எழுதச் சொன்னான் என்பதும், அப்படி எழுதப்பட்டது என்பதும் முழு பொய்
அவன் கல்லறையில் அவன் கிறிஸ்தவ கர்த்தருக்குள் நித்திரை அடைந்தான் என எழுதப்பட்டதே அன்றி, தமிழில் உறங்குகின்றான் என எழுதப்படவே இல்லை
அவன் லண்டனுக்கு திரும்பியபின்னும் சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு மட்டும் ஏன் பணம் அனுப்பினான் என்பதும் மர்மம்
அவன் கடிதமெல்லாம் திருவாசக உரைகளால் வழியும், அவன் அதனை அழுது அழுது எழுதினான் என சொல்லும் தமிழ்க்கூட்டம் அப்படி ஒரு கடிதத்தைக் கூட கடைசிவரை ஆதாரமாகக் காட்டவில்லை
இப்படிப்பட்ட ஒரு நூற்றாண்டு பொய்யினைத்தான் உடைத்திருக்கின்றார் ஆளுநர், உண்மையில் இது ஒரு புரட்சிக் குரல்
வழக்கமாக ஆளுநர் எதை சொன்னாலும் பொங்கும் திராவிட மற்றும் போலிதமிழ்க்கூட்டம் இம்முறை கனத்த அமைதி, எனினும் அடுத்தமுறை ஆளுநர் மாளிகைக்கு டீ குடிக்க செல்லும்பொழுது இதனை திராவிடத்தார் கேட்டுவிட்டுத்தான் அடுத்தவேலை பார்ப்பார்கள் என நம்புவோம்
சரி, ஜியு போப்பினை ஏன் சரியாக அடித்தார் ஆளுநர்?
அந்த போப்புக்கு சென்னையில் சிலை வைத்தவர் கருணாநிதி என்பது குறிப்பிடதக்கது.