கருணாநிதியின் சிலை திறப்பு நிகழ்வில் இடம்பெற்ற கல்வெட்டில் 5 கட்டளைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.
5 கட்டளைகள் கருணாநிதியின் கட்டளைகளாக கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளன.. அவை..
1. அண்ணா வழியில் அயராது உழைப்போம்
2. ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்
3. இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்
4. வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்
5. மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி
இந்த பஞ்சசீலக் கொள்கைகள் கருணாநிதியால் சொல்லப் பட்டதாக, கல்வெட்டில் பொறித்து வைத்திருக்கிறார்கள்
இந்த கல்வெட்டு திறக்கப்படும்போது இந்தி திணிப்பை என்றென்றும் தமிழகத்தில் மேற்கொண்டுவந்த காங்கிரசின் சோனியாவும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது