சட்ட விரோத பி.எஸ்.என்.எல். இணைப்பு வழக்கில் மாறன் சகோதரர்கள் மீது சி.பி.ஐ. குற்றச்சாட்டுகள் பதிவு செய்தது.
கூட்டுச்சதி, ஆவணங்களை அழித்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கலாநிதி மாறனுக்கு எதிராக விசாரணை நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டிருக்கிறது.
மாறன் சகோதரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் வருகிற 19-ந் தேதி சாட்சிகள் விசாரணை தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டு பதிவின்போது “தனக்கு எதிராக சதி நடப்பதாக” கூறி கலாநிதி மாறன் பதற்றத்துடன் பதில் அளித்தார். மேலும், சன் டி.வி.யை ஒழிக்க முயல்வதாகவும் கலாநிதி மாறன் புகார் கூறினார்.