படம் சொல்லும் கதை: இது எந்தப் பகுதி தெரியுமா?
இந்தப் படம், திருவாங்கூர் மகாராஜா 1952ல் கன்னியாகுமரி பகுதிக்கு வந்த போது எடுத்தது. விமானத்தில் பறந்து கொண்டே, மேலிருந்து பருந்துப் பார்வையில் கன்னியாகுமரி முக்கடல் சங்கமிக்கும் பகுதியில் அழகிய காட்சியை அன்றைய கறுப்பு வெள்ளையில் க்ளிக்கியிருக்கிறார் மகாராஜா.
கன்னியாகுமரி எந்த கட்டடமும் இல்லாமல் கன்னியாகவே இருந்த பொது எடுத்த படம். திருவாங்கூர் வழிவந்த மன்னர்கள் கன்னியாகுமரிக்கு தனது சொந்த இரண்டு இருக்கை குட்டி விமானத்தில் வருகை தரும்போது முக்கடல் சந்திப்பு மீது இருந்து எடுத்த படம் இது .எடுத்த ஆண்டு 1952. அரிய புகைப்படங்களில் ஒன்று.
– டி.எஸ்.குமார்