தானா சேர்ந்த கூட்டம் படத்தில் தனது சமூக கோபத்தையும் அவர் வெளிப்படையாகவே காட்டியிருந்தார். அதனால் அரசியலில் சூர்யா ஈடுபடுவார் என்ற தகவல் வெளியானாலும், அதற்கு அவர் எந்த மறுப்பும் தெரிவிக்கவும் இல்லை.
’அகரத்தின் முதல்வரே’ என்ற வாசகத்துடன் போஸ்டர்கள் நம்மை ஈர்க்கிறது. கல்விக்கண் திறந்த காமராஜர், மக்கள் மனதை கவர்ந்த அப்துல்கலாம் வரிசையில், சூர்யாவின் போட்டோவும் போஸ்டர்களில் நிறைந்திருக்கிறது. பாஜகவுக்கு மாற்றாக சூர்யாவை உச்சத்தில் வைத்து பார்க்க துவங்கி உள்ளனர் ரசிகர்கள்.
இணையதளங்களில், சூர்யா விரைவில் காங்கிரசில் இணைவார் என்ற கிசுகிசுக்களும் வந்த வண்ணம் இருகின்றன.
சூர்யாவை நாம் இத்தனை காலம் பார்த்து வந்தாலும், இந்த முறை பிறந்த நாளில் ஒரு ஸ்பெஷல் தெரிந்தது. “அரசியலுக்கு வா தலைவா” என்று வெளிப்படையாகவே அழைத்து தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.