Home ஆன்மிகம் ஆன்மிகச் செய்திகள் நிஷ்காம பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

நிஷ்காம பக்தி: ஆச்சார்யாள் அருளுரை!

குசேலன் பகவானுடைய ஸந்நிதிக்குச் சென்றபோது தனக்கு “இது வேண்டும், அது வேண்டும்” என்றெல்லாம் சொல்லவில்லை..ஒரு பிடி அவலை பகவானிடம் கொடுத்தான்,

“இதனால் கிருஷ்ண பரமாத்மா ஸந்தோஷமாகட்டும்” என்ற ஒரே எண்ணத்தில் கொடுத்தான்..பகவான் அதை அப்படியே வாயில் போட்டுக் கொண்டு ” தனக்கு திருப்தியாய்விட்டது” என்றார்..

அதே ஸமயத்தில் குசேலன் குபேரனாகிவிட்டான்..ஸர்வக்யனான பகவானிடம் நாம் ஒன்றும் கேட்கவேண்டியதில்லை, என்பதற்கு இது ஒன்று போதாதா..! அதனால் நாம் செய்யும் நல்ல காரியமோ பூஜையோ ப்ரசாரத்திற்காக அல்ல..

அதனால் ஈசுவரன் திருப்தி அடைய வேண்டும்..அதனால் தான் பீஷ்மர் ” யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னர: ஸதா” என்று கூறி, பக்தியினால் ஒருவன் பகவான் நாமத்தை ஜபித்தால், அதுவே பெரிய தர்மம், என்று சுட்டிக் காட்டினார்…

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version