சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று மார்கழி ஆருத்ரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப் பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா திருவிழாவும் நடக்கும்.
மார்கழி மாத ஆருத்ரா திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயில் கொடிமரத்தில் உத்ஸவ ஆச்சார்யர் நடராஜ தீட்சிதரால் கொடி ஏற்றப்பட்டது.