விடுகையும் உபாயம் அல்ல; பற்றுகையும் உபாயம் அல்ல:
விடுவித்துப் பற்றுவிக்குமவனே உபாயம் – பிள்ளைத் திருநறையூர் அரையருக்கு நஞ்சீயர் வார்த்தை. – நாலாயிரப்படி.
“ஸர்வதர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ..”….எல்லா தர்மத்தையும் விட்டு என்னைப் பற்று என்றான் ஸ்ரீ கண்ணபிரான், திருத்தேர்தட்டிலே நின்றுகொண்டு!
அவனை அடைதற்கு எல்லாவற்றையும் விடுதல் வழியா ?அல்லது அவனை பற்றுதல் வழியா?
விடுவித்துப் பற்றுவிக்குமவனான எம்பெருமானே உபாயம் என்றபடி. – நாம் செய்யும் விடுதலோ அவனைப் பற்றுதலோ வழி இல்லை. இதை செய்விக்கும் அவனே அவனை அடிவிக்கும் வழி என்றபடி.
என்னைத் தீமனம் கெடுத்தாய் என்று விடுவிப்பவன் அவனே; இசைவித்தென்னை உன் தாளிணைக்கீழ் இருத்தும் அம்மானே, என்று பற்றுவிப்பவனும் அவனே.
எம்பெருமானே உபாயம் என்றபடி. ஆசார்ய ஹ்ருதயம் 105 முத்ல் 115 வரை உள்ள சூர்ணிகைகளில் மிகத் தெளிவாகக் காணலாம்.
- வானமாமலை பத்மனாபன்