மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கயானாவில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களம் இறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் எடுத்திருந்தது. பொல்லார்டு அதிகபட்சமாக 58 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து ஆடிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
கோலி 59 ரன்களும், ரிஷப் பந்த் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தனர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக வென்றுள்ளது.