புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக அல்ல, கல்விக்கு எதிராகவே பிரசாரம் செய்தாலே போதும்.. பொதுமக்கள் அமோக ஆதரவு அளிப்பார்கள், கூட்டமும் குவியும், பொழப்பும் ஓடும் என்று திருமாவளவனுக்கு டிப்ஸ் கொடுத்திருக்கிறார் நடிகரும் பாஜக., பிரமுகருமான எஸ்.வி.சேகர்.
முன்னதாக சென்னையில் நடைபெற்ற தமது பிறந்தநாள் நிகழ்ச்சியில் பேசிய அவர், ஒரு மாதத்திற்கு பனை விதை ஊன்றுவதை செயல் திட்டமாக முன்னெடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக் கேட்டுக் கொண்டார். மேலும், பொதுவெளியில் இருக்கும் தம்மை ஒரு வட்டத்திற்குள் சுருக்க நினைப்பதாக கருத்து தெரிவித்தார்.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டும் என்று தமது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திருமாவளவனின் பேச்சுக்கு பதில் அளிக்கும் வகையில், டிவிட்டர் பதிவில் கருத்து தெரிவித்துள்ள எஸ்.வி.சேகர், புதிய கல்விக் கொள்கை இல்ல.. கல்விக்கு எதிராக பிரசாரம் செய்தாலே போதும்… கூட்டம் குவியும் என்று கேலி செய்திருக்கிறார்.
அதென்ன புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக⁉️கல்விக்கு எதிரான பரப்புரை செய்தாலே கூட்டம் குவியுமில்ல. பொழைப்பும் ஓடும். https://t.co/19rqNqmNFJ
— S.VE.SHEKHER???????? (@SVESHEKHER) August 17, 2019
மாற்றத்தை நோக்கி உலகம் நவீனத்துக்கு சென்று கொண்டிருக்கும் இந்த நாளில், வருங்கால சமூகத்தின் நலன் கருதி கல்வியலாளர்கள், அறிஞர்கள் எடுத்து வரும் அறிவு பூர்வமான செயல்களை, அரசியல் என்ற பெயரில் தடுத்து நிறுத்தி, சமூகத்தை பின்னோக்கி இழுத்துச் செல்லும் செயல்களில் திராவிட இயக்கங்களும், கட்சிகளும் விடுதலைச் சிறுத்தைகள் போன்ற அரசியல் கட்சிகளும் செய்து வருவது கல்வியியலாளர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.