அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது நீட்டிக்கப்பட்டுள்ளதால் , நடப்பாண்டு டி.என்.பி.எஸ்.சி தேர்வு ரத்து என்பது தவறான தகவல். நடப்பாண்டுக்கான தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும்.
குரூப் 1 முதல் குரூப் 4 வரை அனைத்து தேர்வுகளும் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வு எழுத காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு எவ்வித பாதிப்பும் வராது. ஏற்கனவே வெளியிடப்பட்ட 2020 ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையின்படி தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளது.