தமிழகத்திற்கு மேலும் 3 ரயில்களை இயக்க கோரி தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஐந்தாவது கட்ட ஊரடங்கில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளில் பொதுபோக்குவரத்தும் துவங்கியது.
அந்த வகையில் தமிழகத்தில் 4 பகல் நேர ரயில்கள் இயங்கி வருகிறது. இதனோடு திருச்சி – செங்கல்பட்டு இடையே அரியலூர், விழுப்புரம் மற்றும் தஞ்சை, மாயவரம், விழுப்புரம் வழியாகவும், அரக்கோணம் – கோவை இடையே காட்பாடி, சேலம் வழியாக இன்டர்சிட்டி ரயில் இயக்கவும் தமிழக அரசு கோரியுள்ளது.
இதுவரை இயக்கப்பட்டு வரும் ரயில்கள்:
- கோயம்புத்தூர் – மயிலாடுதுறை ஜன சதாப்தி சிறப்பு ரயில்
- மதுரை – விழுப்புரம் இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்
- திருச்சி – நாகர்கோவில் அதிவிரைவு ரயில்
- கோயம்புத்தூர் – காட்பாடி இன்டர்சிட்டி அதிவிரைவு ரயில்