கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சியில் உள்ள சின்னான்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணனின் மகன் பெயர் கௌதம்.
கௌதம் பொள்ளாச்சியில் உள்ள ஒரு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதனிடையே கடந்த சில வாரங்களாக இவருக்கு சமூக வலைத்தளத்தில் 16 வயதான இளம்பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவரும் தனிமையில் செல்போன் பேசிக்கொள்ளும் வரை நெருங்கிப் பழக தொடங்கினர்.
அந்த இளம் பெண்ணை நேரில் சந்திப்பதற்காக மூன்று நாட்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணின் வீட்டிற்கு கௌதம் சென்றுள்ளார்.
இருவரும் தனிமையில் பேசி கொண்டிருந்தபோது, அந்த இளம்பெண்ணின் தந்தை, அண்ணன், மாமா ஆகியோர் எதிர்பாராவிதமாக வீட்டிற்கு வந்துள்ளனர்.
வீட்டின் வாசலில் கௌதமின் செருப்பை பார்த்தவுடன் சந்தேகித்த அவர்கள் வீடு முழுவதும் சோதனை செய்துள்ளனர்.
அப்போது கட்டிலுக்கு அடியில் மறைந்து கிடந்த கௌதமன் கண்டுபிடித்துள்ளனர்.
உடனடியாக கிரிக்கெட் பேட் முதலிய கனமான பொருட்களால் கௌதமை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதனால் படுகாயம் அடைந்த கௌதம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.