திமுக.,வினர் ஆக்கிரமித்து கட்டியதெல்லாம் தில்லியில் இருப்பவர்களுக்குத் தெரியாது என்பதால் அங்கே போய் விவாதிக்கிறார்களா? என்று பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னை குறித்து மக்களவையில் விவாதிக்க திமுக., தரப்பில் இருந்து நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸை மக்களவை செயலகத்தில் திமுக., மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வழங்கியுள்ளார்.
இதுகுறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா… ‘வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம், தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஏற்கெனவே, தமிழகத்தில் திமுக.,வினர் தண்ணீர் பிரச்னைக்காகப் போடும் நாடகம் குறித்து தனது டிவிட்டர் பதிவுகளில் கேள்வி எழுப்பி வந்தார்.
படித்ததில் பிடித்தது:
குடம் இங்கே தண்ணீர் எங்கே-ஸ்டாலின்.
சென்னை இங்கே ஏரிகள் எங்கே- மக்கள்.— H Raja (@HRajaBJP) June 24, 2019
வள்ளுவர் கோட்டம், மதுரை உயர்நீதிமன்ற கட்டிடம் தாலுகா அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பஸ் நிலையம் எல்லாம் ஏரிகளை ஆக்கிரமித்து கட்டியதால் தண்ணீர் பற்றாக்குறை என்று டெல்லியில் உள்ளவர்களுக்கு தெரியாது என்பதால் அங்கு விவாதமா? https://t.co/hu8oTciicF
— H Raja (@HRajaBJP) June 24, 2019
இதà¯à®µà¯à®®à¯ தி.à®®à¯.க.வின௠நாடகஙà¯à®•à®³à®¿à®²à¯ ஒர௠சிறிய எபிசோடà¯à®©à¯à®©à¯ டெலà¯à®²à®¿à®•à¯à®•à¯ எடà¯à®¤à¯à®¤à¯ சொலà¯à®²à¯à®™à¯à®• ராஜா sar.
இதà¯à®µà¯à®®à¯ தி.à®®à¯.க.வின௠நாடகஙà¯à®•à®³à®¿à®²à¯ ஒர௠சிறிய எபிசோடà¯à®©à¯à®©à¯ டெலà¯à®²à®¿à®•à¯à®•à¯ எடà¯à®¤à¯à®¤à¯ சொலà¯à®²à¯à®™à¯à®• ராஜா சாரà¯.