தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் அடிபடும் பெயர் செபஸ்டியன் சீமான் மற்றும் டேனியல் காந்தி ஆகியோர்.
சீமானுக்கு மதிப்பு கொடுக்கும் விதமாகவும், தமிழர் கலாசாரப் படியும் அவரது தந்தை பெயரை சரியாகச் சொல்லி, அவருக்கு உயர்வு கொடுக்க வேண்டும் என்ற நோக்கிலும் சிலர் அவரது முழுப் பெயரை செபஸ்டியன் சீமான் என்றே குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தன் தந்தை செபஸ்டியன் பெயரை ஒரே ஓர் இடத்தில் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் என்றும், மற்ற இடங்களில் தன் தந்தை பெயரை சொல்லவும் கூச்சப்பட்டு, வெட்கப் பட்டு, வேதனைப் பட்டு துக்கப் பட்டு துயரப் பட்டு, மற்ற சில தலைவர்களையே தனக்குத் தந்தை என்று கூறிவருகிறார் என்றும் மீம்ஸ்கள் களை கட்டி வருகின்றன.
அப்படி சீமான் தன் தந்தையின் பெயரைக் குறிப்பிட்டு செபஸ்டியன் என்று சொல்லிக் கொண்ட இடம், அதுவும் வேறு வழியின்றி, கட்டாயத்தின் பேரில் குறிப்பிட்டுக் கொண்ட இடம்… தேர்தல் ஆணையத்தில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தபோதுதான் என்று இதனை சமூகத் தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.