நெல்லை மாவட்டம் குற்றாலம் அருவியில் பலத்த மழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து குற்றாலம் ஐந்தருவி மெயின் அருவி ஆகிய அருவிகளில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு வளைவை தாண்டி நீர் விழுந்தது இதனால் போலீசார் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதித்தனர்.