சுவிஸ்ஸில் நடந்த விவகாரம்; வைரமுத்துவின் அதிர்ச்சியூட்டும் பின்னணியை அம்பலப் படுத்தும் சின்மயி தாயார்!
பாடகி சின்மயி தனது ட்விட்டர் பதிவில், ‘2005 அல்லது 2006 என நினைக்கிறேன். ஸ்விட்சர்லாந்தில் ஒரு கச்சேரிக்காக சென்றிருந்தோம். அங்கு கச்சேரியை அரங்கேற்றிய பிறகு, அந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்னையும் என் அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார். எதற்கு? என நாங்கள் கேட்டபோது, ‘வைரமுத்து இருக்கும் ஹோட்டலுக்குச் செல்லுங்கள்’ என்று அவர் தெரிவித்தார். ஏன் எதற்கு? என்று கேட்டபோது, ‘அவருக்கு ஒத்துழைப்புக் கொடுங்கள்’ என்றார். மறுத்த நாங்கள் சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம்’ என்று பதிவு செய்துள்ளார். அது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில் அன்று நடந்தது குறித்து, பாடகி சின்மயியின் தாயார் கூறுபவை.. இங்கே!