பாலுமகேந்திரா சகோதரரின் தேவ ஊழியத்தால் பதற்றத்தில் மட்டக்களப்பு: எல்லை மீறும் கிறிஸ்துவ அநாகரிங்கள்!

Published:

இலங்கையின் மட்டக்களப்பில், கிறிஸ்துவ மதமாற்றம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்ப் பெண்கள் மத்தியில் சென்று, அவர்களை மனநோயாளிகளாக்கும் செயல்களில் கிறிஸ்துவ வெறியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பேய் பிடித்தது போலும் சாத்தான் ஏறியது போலும் சிலரை நடிக்க வைத்து, ஒட்டு மொத்தமாகக் கூடும் பெண்களுக்கு அவமரியாதையான சொற்களைக் கற்றுக் கொடுத்து, அவர்களைப் பேசச் செய்து, அநாகரிகங்களை அரங்கேற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே முஸ்லிம்களின் தாக்குதலுக்கு உள்ளாகிக் கிடக்கும் தமிழ்ச் சமூகம், இப்போது கிறிஸ்துவ மதவெறியர்களிடம் சிக்கிக் கொண்டு முழிக்கிறது.

இந்தச் சம்பவம் குறித்து இலங்கை அன்பர் ரிசிந்தன் நிசாந்த் என்பவர், இவ்வாறு தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்….

மட்டக்களப்பில் இந்துக்களை மதம்மாற்றி இறைவாசகங்களாக பக்தி பரவசத்தில் பெண்களை தூசனங்களை (அநாகரிக வார்த்தைகளை பேச வைக்கும் கிறிஸ்தவ போதகர்!

யாராவது இந்துமதகுரு அல்லது சாதாரணமான ஒருவர் பெண்களை பற்றி பொது இடத்தில் பேசினால் கொதித்து எழும் தாய்க்குலங்கள் கண்ணுக்கு இப்படியான பச்சை பச்சையாக அருவருப்பாக அதுவும் பெண்கள் வாயாலே திருவாக்காக வெளியேறும் வார்த்தைகள் தெரியவில்லையா????? எத்தனை கீழ்த்தரமானது இதையெல்லாம் திருச்சபைகள் வேடிக்கை பார்ப்பது இன்னும் ஊக்கிவிக்க துணை போகின்றார்களா எனும் ஐயம் எழுகின்றது.

ALSO READ:  விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

#இந்த திருச்சபையை வழிநடத்தும் போதகர் வேறு யாருமில்லை மட்டக்களப்பிலிருந்து தமிழ்நாட்டில் சினிமாவில் சரித்திரம் படைத்தவரும் கதை, தயாரிப்பாளர் ,கவிஞர், ஒளிப்பட பதிவாளரும் மறைந்த அமரர் பாலுமகேந்திரா அண்ணணான வின்சன் இவர் கனடாவில் வசித்து தற்போது இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் மட்டக்களப்பு மாவட்டத்தில் மதம்மாற்றவும் நாகரிகமற்ற வார்த்தைகளை பழக்கும் கற்கைநெறிகளை உருவாக்க மட்டக்களப்பு பார்வீதியிலுள்ள திருச்சபைகளில் குடியேறியுள்ளார்.

#அவதானம் மக்களே மதம்மாற்றும் கத்தோலிக்க கிறிஸ்தவ பிரிவு சாராத பெந்தகோஸ்து ,மெதடிஸ், இயேசு ஜீவிக்கிறார் ,ஆவிக்குரிய சபை, ஜெகோவா,அட்வெண்டிஸ் என பல பெயரில் குழுக்கள் ஊழியம் எனும் பெயரில் இதில் காணப்படும் வீடியோவில் மதம்மாற்றிய இந்துப்பெண்களுக்கு அருவருப்பான வார்த்தைகளை பழக்கி உங்கள் ஒவ்வொருவர் வீடு தேடி விற்பனை முகவர் போன்று மதவிபச்சாரிகள் தரகராக வலம் வருவார்கள்.அவதானமாக ஊழியம் செய்ய வருவபரை அல்லது தரகர்மாரை துரத்தியடிங்கள்.

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img