பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஈரோடு நகருக்கு வந்திருந்தார் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா.
அப்போது, மின் கம்பிகள் குறித்து கேள்வி கேட்டார் செய்தியாளர்…
அதற்கு ஆவேசமாக பதில் அளித்த ஹெச்.ராஜா, தாம் கேரளத்துக்கான பாஜக., பொறுப்பாளர் என்ற விதத்தில், கேரளத்தில் அவ்வாறு அமைக்கப்படவில்லை என்றும், எந்த நாடுகளிலும் 800 கேவி மின்சார கேபிளை நிலத்தடியில் கொண்டு செல்ல வழியில்லை, அந்த தொழில்நுட்பம் எங்கேயும் இல்லை. எனவே யாரோ சொல்வதைக் கேட்டுவிட்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறினார்.