ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும், ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என அமெரிக்காவில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாசாரத்தை நாம் பின்பற்றினாலும் வெளிநாடுகளில் அதுபோன்ற நடைமுறை இல்லை. ஆண் பல பெண்களையயும், பெண் பல ஆண்களையும் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் அமெரிக்கா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் இருக்கிறது. இந்நிலையில் அமெரிக்காவின் யூட்டா மாகாணத்தில் புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு பெண் ஒரே நேரத்தில் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம், ஒரு ஆண் ஒரே நேரத்தில் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு முன்பு அப்படி திருமணம் செய்து கொண்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என வழக்கம் இருந்தது. ஆனால் தற்போது அதைமாற்றி புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது.