சீனாவின் முதல் செவ்வாய் கிரக ஆய்வு (தியான்வென் -1) பூமி மற்றும் சந்திரனின் புகைப்படத்தை அதன் இலக்கை நோக்கி செல்லும் போது எடுத்துள்ளது என்று அந்நாட்டின் விண்வெளி நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
விண்வெளியில் பூமி மற்றும் சந்திரனை சிறிய பிறைகளாகக் காட்டும் அந்தப் படம், கடந்த வாரம் வியாழக்கிழமை தியான்வென் -1 பணி தொடங்கப்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு பூமியிலிருந்து 1.2 மில்லியன் கிலோமீட்டர் (746,000 மைல்) தொலைவில் எடுக்கப்பட்டது என்று சீன தேசிய விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது
செவ்வாய் கிரகத்திற்கு ஒரு பயணத்தைத் தொடங்க சீனா இந்த மாதம் அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் இணைந்தது. “பரலோகத்திற்கான கேள்விகள்” (Questions to Heaven) என்ற பெயருடன் தொடங்கப்பட்ட இந்த பணி, ஏவப்பட்ட ஏழு மாதங்களுக்குப் பிறகு செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் நுழைந்து கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய ஒரு சிறிய ரோவரை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தேசிய விண்வெளி நிர்வாகம் செவ்வாயன்று, “பூமியின் ஈர்ப்பு விசையை விட்டு வெளியேறிய தியான்வென் -1, தற்போது நல்ல நிலையில் உள்ளது, சீரான எரிபொருள் உள்ளது மற்றும் சாதாரணமாக இயங்குகிறது” என்று கூறியது.
செவ்வாய்க்கிழமைக்குள் ரோவர் பூமியிலிருந்து குறைந்தது 1.2 மில்லியன் கிலோமீட்டர் தூரம் பயணித்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு முன்னர் 55 மில்லியன் கிலோமீட்டர்களில் ஒரு பகுதியே இந்த பயணம் ஆகும்.