மஹாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 99 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ் இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் நடந்த நினைவு தினத்தில் நல்லூர் அரசடியில் அமைந்துள்ள பாரதியாரின் உருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது
இந்நிகழ்வில் யாழ் இந்திய துணை தூதர் சங்கர் பாலச்சந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மற்றும் அனந்தி சசிதரன் ,சிவிகே சிவஞானம் யாழ் மாநகர முதல்வர் இமானுவல் ஆனோல்ட், பா.கஜதீபன் கல்வியாளர்கள் பொதுதக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்’
- இ.சாரங்கன், யாழப்பாணம் இலங்கை.