டாக்கா ட்ரிபியூன் ஊடகத்தின் அறிக்கையின்படி, பங்களாதேஷின் சிட்டகாங்கில் 14 வயது மதரஸா மாணவியை, இரண்டு நாட்கள் அடைத்து வைத்து மீண்டும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்ததற்காக 50 வயதான இமாம் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுல் பஷர்- சந்தினா தீர்ச்சார் பகுதியில் உள்ள ஒரு மசூதியில், இமாம் ஆரம்ப விசாரணையின் போது தனது குற்றங்களை ஒப்புக்கொண்டார். இமாம் Abul Bashar (50) ஜூலை 22 மற்றும் 23 தேதிகளில் சிறுமியை சிறைப்பிடித்து வைத்திருந்ததாக தெரிவித்தார். ஜூலை 24 அன்று, சிறுமி மீண்டும் மீண்டும் தாக்குதலுக்கு ஆளானார்.
பின்னர் அந்த பெண்ணை பஷார் தனது சகோதரனுடன் விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
அன்றிலிருந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனையடுத்து, சிறுமியின் தந்தை பஷார் மீது புகாரை பதிவு செய்ததையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சிறுமிக்கு அவரது குடும்பத்தினரால் அரபி கற்பிக்க பஷார் நியமிக்கப்பட்டார்.
ஆரம்ப விசாரணையின் போது, சிறுமியை ஏமாற்றி தனது வீட்டில் அடைத்ததாக பஷார் ஒப்புக்கொண்டார். அவரும் அவளை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒப்புக்கொண்டார்.
அறிக்கையின்படி, கடந்த ஆண்டு நவம்பரில் பாலியல் வன்கொடுமைக்கு அரசு மரண தண்டனை விதித்த போதிலும், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் அதிகரித்து வருகின்றன.
வங்காளதேசத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 26,695 கற்பழிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் வெளியிடப்பட்ட போலீஸ் தலைமையக அறிக்கையில் தெரியவந்துள்ளது.
ஒரு ஆர்வலர் குழுவால் வெளியிடப்பட்ட தரவு படி, கடந்த ஆண்டில் மட்டும் குறைந்தது 1,018 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறுகிறது. ஆனால் 683 காவல்துறையில் வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர்களில், 116 பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டவர்கள் ஆறு வயது அல்லது அதற்கும் குறைவானவர்கள்.