வங்கதேச தேர்தலில் ஷேக் ஹசீனாவின் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.
வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான, அவாமி லீக் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது. இதனையடுத்து நான்காவது முறையாக, பிரதமர் பதவியை ஹசீனா கைப்பற்றுகிறார்.
பிரதமர் ஹசீனாவின் ஆளும் அவாமி லீக் கூட்டணி 191 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. இந்த விவரத்தை அந்நாட்டு தேர்தல் செய்திகளை வெளியிடும் சேனல் 24 தெரிவித்துள்ளது.
வங்கதேச தேசியவாத கட்சி போட்டியிட்ட 221 தொகுதிகளில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.