கோலாலம்பூர்: ரஷ்யாவைச் சேர்ந்த, முன்னாள் அழகியை ரகசிய திருமணம் செய்து, பல மாதங்களாக நாடு திரும்பாத, ஆசிய நாடான, மலேஷியாவின் மன்னர், சுல்தான் முஹம்மது வி, 49, மன்னர் பதவியை விட்டு விலகியுளார்,. ஞாயிற்றுக்கிழமை நேற்று அவர் பதவி விலகியதாக மலேசிய அரண்மனை அறிக்கை வெளியிட்டது.
மலேஷியாவில், ஒவ்வொரு ஐந்தாண்டும், அரச குடும்பத்திற்குள், மன்னர் பதவி கைமாறுவது, பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் நடைமுறைதான். இந்நிலையில் மன்னர் திடீரென பதவி விலகியுள்ளதால், புதிய மன்னர்த் தேர்ந்தெடுக்க அரண்மனை தீவிரம் காட்டி வருகிறது.
மலேசிய மன்னரின் பதவி விலகல் அந்த நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.