செப்.2019ல் ரஷ்யாவில் வ்ளாடிவோஸ்டோக்கில் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு பெருமைப் படுத்த வேண்டும் என்று, பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு, பிரதமர் மோடியிடம் பேசிய புடின், இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு வேண்டுகோள் விடுத்ததுடன், வரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெறவும் வாழ்த்து தெரிவித்தார்.
தேர்தலுக்குப் பின்னர் இந்த வருடம் செப்டம்பரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது! மோடியை இதில் பங்கேற்குமாறு புடின் வேண்டுகோள் விடுத்துள்ளார்!