இன்றைய பஞ்சாங்கம்: மே 19
ஶ்ரீராமஜெயம். ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம
||श्री:||
!!श्रीरामजयम!! ஸ்ரீராமஜெயம்
!!ஸ்ரீ:!!
श्री:
श्रीमते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம் வைகாசி ~ 6 (19.5.2024 ) ஞாயிற்றுக் கிழமை*
வருடம் ~ க்ரோதி வருஷம் {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம்~ வைகாசி மாஸம் { *வ்ருஷப மாஸம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 2 .51 pm வரை ஏகாதசி பின் த்வாதசி
நாள் ~ பானு வாஸரம் (ஞாயிற்றுக்கிழமை)
நட்சத்திரம் ~ மறுநாள் காலை வரை ஹஸ்தம் பின் சித்திரை
யோகம் ~ வஜ்ரம்
கரணம் ~ பத்ரம்
அமிர்தாதியோகம் ~ சுபயோகம்.
ராகு காலம்~ மாலை 4.30~ 6.00.
எமகண்டம் ~ மதியம் 12.00 ~ 1.30.
குளிகை ~ மாலை 3.00 ~ 4.30. நல்லநேரம் * ~. 9.00 to 10.30 am 3.00 to 4.30pm
சூரிய உதயம் ~. காலை 5.53
சந்திராஷ்டமம் ~ கும்பம்
சூலம் ~ மேற்கு.
பரிகாரம் ~ வெல்லம்.
ஸ்ரார்த்ததிதி ~ அதிதி
இன்று ~ ஏகாதசி.
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः । गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु ॥
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः !!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!!
!!ॐ सर्वे भवन्तु सुखिनः। सर्वे सन्तु निरामयाः। सर्वे भद्राणि पश्यन्तु। मा कश्चित् दुःख भाग्भवेत्!!
!!ॐ शान्तिः शान्तिः शान्तिः!!
ஞாயிற்றுக்கிழமை ஹோரை
காலை
6-7. சூரியன். அசுபம்.
7-8. சுக்கிரன். சுபம்
8-9.. புதன். சுபம்
9-10.. சந்திரன். சுபம்
10-11. சனி.. அசுபம்
11-12. குரு. சுபம்
பிற்பகல்
12- 1. செவ்வா. அசுபம்
1-2. சூரியன். அசுபம்
2-3. சுக்கிரன். சுபம்
3-4. புதன். சுபம்
மாலை
4-5. சந்திரன்.சுபம்
5-6 சனி.. அசுபம்
6-7 குரு. சுபம்
நல்ல நேரம் பார்த்து , நல்ல ஹோரை பார்த்து செய்யும் காரியங்கள் – மிக மோசமான தசை , புக்தி காலங்களிலும் உங்களுக்கு ஒரு அரு மருந்தாக அமையும்.
இன்றைய (19-05-2024) ராசி பலன்கள்
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள்..!
குடும்பத்தின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். பணி விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
பரணி : அனுபவங்கள் கிடைக்கும்.
கிருத்திகை : ஆதாயகரமான நாள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள்..!
கற்பனை சார்ந்த துறைகளில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் புதுவிதமான ஆசைகள் பிறக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் உண்டாகும்.
ரோகிணி : அனுபவம் வெளிப்படும்.
மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள்..!
தாய்வழி உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். கல்விப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். வருமானம் குறித்த எண்ணம் மேம்படும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். முயற்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் நிறம்.
மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு மேம்படும்.
திருவாதிரை : ஆதரவு கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள்..!
குடும்பத்தில் உங்களின் பேச்சுகளுக்கு மதிப்பு மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் புதிய தைரியம் பிறக்கும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
புனர்பூசம் : மதிப்பு மேம்படும்.
பூசம் : மகிழ்ச்சியான நாள்.
ஆயில்யம் : தைரியம் பிறக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள்..!
கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். தோற்றப் பொலிவில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். திடீர் திருப்பம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை நிறம்
மகம் : புரிதல் மேம்படும்
பூரம் : தெளிவு ஏற்படும்.
உத்திரம் : திருப்பம் உண்டாகும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள்..!
பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சில விஷயங்களில் அனுபவம் வெளிப்படும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அதிகாரிகளிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் பொறுமையை கையாள்வது நல்லது. எதிலும் திட்டமிட்டு செயல்பட்டால் காலதாமதம் குறையும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : சோர்வான நாள்.
அஸ்தம் : வாதங்கள் நீங்கும்.
சித்திரை : காலதாமதம் குறையும்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள்..!
தம்பதிகளுக்கு சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகள் ஏற்படும். வெளி வட்டாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மதிப்பை உண்டாக்கும். மேல் அதிகாரிகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். எதிலும் நிதானத்தோடு செயல்படுவது நல்லது. நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
சித்திரை : வாதங்கள் நீங்கும்.
சுவாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
விசாகம் : நிதானம் வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள்..!
குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் உண்டாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். சிந்தனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
விசாகம் : மகிழ்ச்சியான நாள்.
அனுஷம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
கேட்டை : உற்சாகம் பிறக்கும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள்..!
மனதில் இருந்துவந்த ஆசைகள் நிறைவேறும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார இடமாற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெள்ளை நிறம்
மூலம் : ஆசைகள் நிறைவேறும்.
பூராடம் : பொறுப்புகள் மேம்படும்.
உத்திராடம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள்..!
முன்னேற்றம் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். இறை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ஒப்பந்தங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. கலைத்துறையில் சாதகமான வாய்ப்புகள் அமையும். அமைதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆர்வம் உண்டாகும்.
திருவோணம் : மாற்றம் பிறக்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள்..!
நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். மனதளவில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். எதிர்பார்த்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். அலுவலகத்தில் மறைமுக விமர்சனங்கள் ஏற்பட்டு நீங்கும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
அவிட்டம் : சோர்வான நாள்.
சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
பூரட்டாதி : விமர்சனங்கள் மறையும்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள்..!
மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். சகோதரர்களின் வழியில் உதவி கிடைக்கும். துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் விலகும். சாதனை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
பூரட்டாதி : தயக்கம் குறையும்.
உத்திரட்டாதி : முடிவுகள் கிடைக்கும்.
ரேவதி : தாமதங்கள் விலகும்.
தினம் ஒரு திருக்குறள்
கூற்றத்தைக் கையால் விளித்தற்றால் ஆற்றுவார்க்கு
ஆற்றாதார் இன்னா செயல். (குறள் 894)
பரிமேலழகர் உரை:
ஆற்றுவார்க்கு ஆற்றாதார் இன்னா செயல் – மூவகை ஆற்றலும்உடையார்க்கு அவை இல்லாதார் தாம் முற்பட்டு இன்னாதவற்றைச் செய்தல்; கூற்றத்தைக் கையால் விளித்தற்று – தானேயும் வரற்பாலனாய கூற்றுவனை அதற்கு முன்னே கைகாட்டி அழைத்தால ஒக்கும். (கையால் விளித்தல் -இகழ்ச்சிக் குறிப்பிற்று. தாமேயும் உயிர்முதலியகோடற்கு உரியாரை அதற்குமுன்னே விரைந்து தம்மேல் வருவித்துக்கொள்வார் இறப்பினது உண்மையும் அண்மையும் கூறியவாறு. இவை இரண்டு பாட்டானும் வேந்தரைப் பிழைத்தலின் குற்றம் கூறப்பட்டது.).
மணக்குடவர் உரை:
வலியுடையார்க்கு வலியில்லாதார் இன்னாதவற்றைச் செய்தல், தம்மைக் கொல்லும் கூற்றத்தைக் கைகாட்டி அழைத்தாற் போலும்.
மு.வரதராசனார் உரை:
ஆற்றல் உடையவர்க்கு ஆற்றல் இல்லாதவர் தீமை செய்தல், தானே வந்து அழிக்க வல்ல எமனைக் கைகாட்டி அழைத்தாற் போன்றது.
தினம் ஒரு திருமுறை
மறை – 2 | பதிகம் – 64 | பாடல் – 8
வாசங் கமழும் பொழில்சூ ழிலங்கை வாழ்வேந்தை
நாசஞ் செய்த நங்கள் பெருமா னமர்கோயில்
பூசைசெய்து வடியார் நின்று புகழ்ந்தேத்த
மூசி வண்டு பாடுஞ் சோலை முதுகுன்றே
விளக்கவுரை
மணம் கமழும் பொழில் சூழ்ந்த இலங்கை வாழ் வேந்தனாகிய இராவணனின் வலிமையை அழித்த நம்பெருமான் அமர்கின்ற கோயில், அடியவர் பூசை செய்து நின்று புகழ்ந்து போற்ற விளங்குவதும், வண்டுகள் மொய்த்துப்பாடும் சோலைகளை உடையதுமான முதுகுன்றாகும்
தினம் ஒரு திவ்யப் பிரபந்தம்
மோடியோடி லச்சையாய சாபமெய்தி முக்கணான்
கூடுசேனை மக்களோடு கொண்டுமண்டி வெஞ்சமத்
தோடவாண னாயிரம் கரங்கழித்த வாதிமால்
பீடுகோயில் கூடுநீர ரங்கமென்ற பேரதே.
– திருச்சந்த விருத்தம் திருமொழி – 6 (804)
விளக்கம் : காளியும் வெட்கத்தை விளைப்பதான சாபத்தையடைந்த ருத்ரனும் ஸ்வஜனங்களோடு திரண்ட ஸேனையை அழைத்துக்கொண்டு பயங்கரமான போர்க்களத்திலிருந்து வேகமாக ஓடிப்போன வளவிலே பாணாஸுரனது ஆயிரம் கைகளைஅறித்தொழித்த பரம புருஷனுடைய பெருமைதங்கிய கோயில் காவேரியோடு கூடின திருவரங்கமென்னும் திருநாமமுடையதாம்.
தினசரி பஞà¯à®šà®¾à®™à¯à®•à®®à¯ மறà¯à®±à¯à®®à¯ தினப௠பலனà¯à®•à®³à¯ உபயோகமாக உளà¯à®³à®¤à¯. நனà¯à®±à®¿.
Nice to read this rasi palan
Very interesting to read this rasi palan
Very very helpful.
very good response